ஆரூரானை ஆட்கொண்ட பேரூர் பட்டீஸ்வரசுவாமி திருக்கோயில் கோவை நகரிலிருந்து மேற்கே போகும் சிறுவாணிசாலையில்; ஆறு கிலோ மீட்டர் பயணித்தால் பேரூர் பட்டீஸ்வரசுவாமி திருக்கோவிலின் ஐந்துநிலை களைக் கொண்ட ராஜகோபுரம் கம்பீரமாய் நம்மை வரவேற்கிறது
மாலை கதிரவன் மேற்கு திசையில் விழும்நேரம். கோவிலின் பிரம்மாண்ட கதவின் முன் நிற்கிறோம். நிறையபேர் காத்திருக்கிறார்கள். தலைமைகுருக்கள் வருகிறார். கதவின் முன் நின்று கையிலிருக்கும் தீவட்டியால் மூன்றுமுறை சலாம் செய்வதுபோல் மேலும் கீழுமாய்ஆட்டுகிறார். நடை திறக்கப்படுகிறது
நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எதற்காக இப்படி செய்கிறார்கள் என்ற காரணத்தை அறிய விசாரித்தோம்.
“திப்புசுல்தான்காலத்திற்கு முன்பாக இங்கு பணிபுரியும் ஆலயகுருக்கள் களுக்கு முறையான வருமானம் ஏதுமின்றி மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த மைசு+ர் மன்னர் திப்புசுல்தான் நிரந்தர வருமானம் தரும் பயிர்நிலங்களை தானமாகக் கொடுத்து அவர்களின் வறுமையைப் போக்கினார்.அந்த உதவியை இன்றளவும் மறவாத அவர்களது சந்ததியினர் திப்புசுல்தான் மன்னருக்கு நன்றி செலுத்தவே இந்ததீவட்டி சலாம ஒவ்வொரு நாளும் செலுத்துகிறார்கள்.
கோவிலின் உள்ளே நீண்ட நடை. ஏராளமான கல்தூண்கள். விதானத்தில் அறு பத்துமூவரின்வரலாற்றுக்காட்சிகள்வண்ணஓவியங்களாய் காட்சி யளிக்கிறது. கூடவே கோவில் பிறந்த வரலாறும் ஓவியமாய் சித்தரிக்ப்பட்டிருக்கிறது
கரிகாற் பெருஞ் சோழன்காலத்திலே இது கட்டப்பட்டிருக்கிறது.பேரையன் என்ற இருளர் தலைமையில் இங்கிருந்த காட்டையழித்து ஊராக்கி அவன். பெயரிலே பேரூர் என்று பெயரிட்டனர்.
மாலை கதிரவன் மேற்கு திசையில் விழும்நேரம். கோவிலின் பிரம்மாண்ட கதவின் முன் நிற்கிறோம். நிறையபேர் காத்திருக்கிறார்கள். தலைமைகுருக்கள் வருகிறார். கதவின் முன் நின்று கையிலிருக்கும் தீவட்டியால் மூன்றுமுறை சலாம் செய்வதுபோல் மேலும் கீழுமாய்ஆட்டுகிறார். நடை திறக்கப்படுகிறது
நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எதற்காக இப்படி செய்கிறார்கள் என்ற காரணத்தை அறிய விசாரித்தோம்.
“திப்புசுல்தான்காலத்திற்கு முன்பாக இங்கு பணிபுரியும் ஆலயகுருக்கள் களுக்கு முறையான வருமானம் ஏதுமின்றி மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த மைசு+ர் மன்னர் திப்புசுல்தான் நிரந்தர வருமானம் தரும் பயிர்நிலங்களை தானமாகக் கொடுத்து அவர்களின் வறுமையைப் போக்கினார்.அந்த உதவியை இன்றளவும் மறவாத அவர்களது சந்ததியினர் திப்புசுல்தான் மன்னருக்கு நன்றி செலுத்தவே இந்ததீவட்டி சலாம ஒவ்வொரு நாளும் செலுத்துகிறார்கள்.
கோவிலின் உள்ளே நீண்ட நடை. ஏராளமான கல்தூண்கள். விதானத்தில் அறு பத்துமூவரின்வரலாற்றுக்காட்சிகள்வண்ணஓவியங்களாய் காட்சி யளிக்கிறது. கூடவே கோவில் பிறந்த வரலாறும் ஓவியமாய் சித்தரிக்ப்பட்டிருக்கிறது
கரிகாற் பெருஞ் சோழன்காலத்திலே இது கட்டப்பட்டிருக்கிறது.பேரையன் என்ற இருளர் தலைமையில் இங்கிருந்த காட்டையழித்து ஊராக்கி அவன். பெயரிலே பேரூர் என்று பெயரிட்டனர்.
2
பசுமாடு ஒன்று இக்காட்டில் புதர் ஒன்றில் தானாக பால் சொரிந்து கொண் டிருந்தது. அம்மாட்டை விரட்ட அது அங்கிருந்து வேகமாக நகர்கையில் அதன் குழம்படி பட்டு அங்கிருந்த கல்லில் ரத்தம் வடிந்திருக்கிறது. அதனை விலக்கிப் பார்த்தபோது லிங்கம் தென்பட்டது. அறிந்து வியந்தனர்.
ஆடு மாடுகள் அடைக்கும் பட்டியிலிருந்து இறைவன் வெளிப்பட்டதால் பட்டிப் பெருமான், பட்டீஸ்வரர் என்றழைக்கப் பட்டார்.
கரிகாற் சோழன்காலத்தில் கொங்குநாட்டில் கட்டப்பட்ட பலகோவில்களில் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலும் ஒன்று.
பின்னர் வந்த பல மன்னர்கள் பல திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். விஜய நகரமன்னர் திருமலைநாயக்கர் காலத்தில் கொங்குநாட்டு பிரதிநிதியாக அளகாத்திரி நாயக்கர் நியமிக்கப்பட்டார். இவர்காலத்தில் கட்டப்பட்ட கனக சபை, செய்த திருப்பணிகள் இன்றளவும் புதிய பொலிவுடன் விளங்குகிறது.
கோவிலின் நடையைக் கடந்து இடதுபுறம் செல்கிறோம். மிகப்பெரியபிரகாரம். கல்தளமிட்டு காண்கிறது. தூரத்தில் ஒரு பாடல் தவழ்ந்து நம் காதை குளிரவைக்கிறது.
பாரூரும் அரவல்குல் உமைநங்கையவள் பங்கன் பைங்கண் ஏற்றன் ஊரூரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட்கொள்வான் ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் ஆணி காஞ்சிவாய்ப் பேரூரர் பெருமானைப் புலியு+ர்ச் சிற்றம்பலத்தே பெற்றோம் அன்றே.; -சட்டென்று நினைவுக்கு வருகிறது. சுந்தரர் தேவாரம். சிதம்பரம் தில்லையம்பலத்தே நின்று புலிஊர்ச்சிற்றம்பலத்தே பெற்றோம் அன்றே. என்கிறார். அப்படியானால் சுந்தரமூர்த்தி நாயனார் பேரூர் வந்துள்ளாரோ?
3 சுந்தரமூர்த்தி நாயனார் தம் துணைவியார் பரவைநாச்சியாரோடு பேரூர் பட்டீஸ்வர பெருமானை தரிசிக்க வந்திருக்கிறார்.
அவர் வருகிற நேரத்தில் ஈஸ்வரன் உழவனாகவும் உமையவள் உழவன் துணைவியாகவும் மாறி காஞ்சிமாநதி ஓரமிருந்த வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்தார். நந்திதேவரிடம் தன்இருப்பிடம் பற்றி கூற வேண்டாம் என்று எச்சரித்துவிட்டுப் போனார்
சுந்தரர் கோவிலுக்கு வந்தார். ஈசனைகாணாது திகைத்தார் நந்திதேவரிடம் விசாரித்தார். நந்திதேவா; வாயால் கூறாமல் முகத்தைத் திருப்பி ஜாடையால் காட்டினார்.
சுந்தரர் வயல்வெளிக்குச் சென்று இறைவனை தரிசித்தார் என்பது வரலாறு.
வெளிபிரகாரத்தில் நிரதி விநாயகர், தண்டபாணி, விசாலாட்சி,விசுவநாதர் ஆகியோர் ஆலயங்கள் வரிசையாய் உள்ளன. வடக்குபிரகாரம் தாண்டி கிழக்கே திரும்பி னால் அம்மன்சந்நதி பச்சைநாயகி என அழைக்கப்படுகிறார். சந்நதியின் வலப்பக்கம் துர்க் கை இடபக்கம் வரதராஜபெருமாள் தனிசந்நதிகள் உள்ளது. துர்க்கையம்மன் சந்நதிக்கு முன் உள்ள சிம்மவாகனத்தின் வாயுள் சுழலும்கல் உள்ள மாதிhp சிற்பம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அம்மனை தரிசித்துவிட்டு முன்புறம் வருகிறோம். பலிபிடம் இடபவாகனம்கடந்து உள்பிரகாரம் செல்கிறோம்.
தென்கிழக்கு மூலையில் மேற்கு பார்த்த சூரியபகவான்சந்நதி தென்புறம் முழுக்க அறுபத்மூவர் திருவுருவச் சிலைகள். மேற்கில் லிங்கங்கள். வடக்கு மூலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி சந்நதி. பக்கத்தில் சுந்தரமூர்த்திநாயனார் சேரமான் பெருமாள் நாயனார் சிலைகள் வடகிழக்கு மூலையில் ஞானபைரவர் நாய்வாகன மின்றி காட்சியளிக்கிறார். பேரூர் ஓர்முக்தி ஸ்தலம் என்பதால் பைரவர் வாகனமின்றி நிற்கிறார்.இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி கிடையாது. இதனை வலியுருத்த இங்கே பிறவா புளி, இறவாப்பனை என்பது சாட்சியாக நிற்கிறது.
4 கோவிலுக்கெதிரே புளியமரமொன்றுள்ளது இதன் விதைகள் முளைப்பதில் லை. அதேபோல் ஆற்றங்கரை ஓரமாய் ஆறுபனைமரங்கள் நிற்கின்றன. இவை பல்லாயிர மாண்டுகள் வாழ்கின்றன. இவை இறப்பதில்லை. பிறப்பு,இறப்பு இல்லை என்பதற்கு இவையே சாட்சி.
அர்த்தமண்டபத்தில் ஏராளமான கல்துhண்கள்.கோவிலுக்கு தானமளித்தவர் என்ன அளித்தார் என்பன போன்ற செய்திகள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.
கருவரையில் மூலவரை கண்குளிர தரிசிக்கிறோம்..வெளியே வந்தால் நடையின் வடபுறம் புகழ்பெற்ற கனகசபை அமைந்துள்ளது. இடதுகாலைத் தூக்கியாடும் நடராசர் சிவகாமவல்லியுடன் வௌ்ளியம்பலத்தில் காட்சியளிக்கிறார். கோவிலின் சிறப்பே கனகசபையில்தான்உள்ளது. கனகசபையின் மேல் விதானத்தில் சுழலும்கல்தாமரை, கல்சங்கலிகள் நுணுக்கமாய் செதுக்கியிருப்பதுகண்டு வியக்காமலிருக்கயியலாது.
கனகசபையின் இருபுறமும் எட்டுத்தூண்களில் மிக அரிய சிற்பங்கள். நர்த்தன விநாயகர், மயில் மீது அமர்ந்த சண்முகம்,ஊர்த்துவதாண்டவர், அகோரவீரபத்ரர், அக்கினிவீரபத்ரர் பிச்சாடநர், யானையுரி போர்த்தவர் என எட்டுசிற்பங்களும் என்றும் இளமையாக தோன்றுகிறது.. இக்கோவின் ஆண்டுவருமானம் ஒரு கோடியே பதினெட்டு லட்சம் என்று பெருமையாக சொல்லி மகிழ்கிறார்கள்.
கடந்த நூற்றாண்டுக்குள் சென்று வந்த திருப்தியோடு நாமும் விடைபெறு வோமா?
-000-
பசுமாடு ஒன்று இக்காட்டில் புதர் ஒன்றில் தானாக பால் சொரிந்து கொண் டிருந்தது. அம்மாட்டை விரட்ட அது அங்கிருந்து வேகமாக நகர்கையில் அதன் குழம்படி பட்டு அங்கிருந்த கல்லில் ரத்தம் வடிந்திருக்கிறது. அதனை விலக்கிப் பார்த்தபோது லிங்கம் தென்பட்டது. அறிந்து வியந்தனர்.
ஆடு மாடுகள் அடைக்கும் பட்டியிலிருந்து இறைவன் வெளிப்பட்டதால் பட்டிப் பெருமான், பட்டீஸ்வரர் என்றழைக்கப் பட்டார்.
கரிகாற் சோழன்காலத்தில் கொங்குநாட்டில் கட்டப்பட்ட பலகோவில்களில் பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலும் ஒன்று.
பின்னர் வந்த பல மன்னர்கள் பல திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். விஜய நகரமன்னர் திருமலைநாயக்கர் காலத்தில் கொங்குநாட்டு பிரதிநிதியாக அளகாத்திரி நாயக்கர் நியமிக்கப்பட்டார். இவர்காலத்தில் கட்டப்பட்ட கனக சபை, செய்த திருப்பணிகள் இன்றளவும் புதிய பொலிவுடன் விளங்குகிறது.
கோவிலின் நடையைக் கடந்து இடதுபுறம் செல்கிறோம். மிகப்பெரியபிரகாரம். கல்தளமிட்டு காண்கிறது. தூரத்தில் ஒரு பாடல் தவழ்ந்து நம் காதை குளிரவைக்கிறது.
பாரூரும் அரவல்குல் உமைநங்கையவள் பங்கன் பைங்கண் ஏற்றன் ஊரூரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட்கொள்வான் ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் ஆணி காஞ்சிவாய்ப் பேரூரர் பெருமானைப் புலியு+ர்ச் சிற்றம்பலத்தே பெற்றோம் அன்றே.; -சட்டென்று நினைவுக்கு வருகிறது. சுந்தரர் தேவாரம். சிதம்பரம் தில்லையம்பலத்தே நின்று புலிஊர்ச்சிற்றம்பலத்தே பெற்றோம் அன்றே. என்கிறார். அப்படியானால் சுந்தரமூர்த்தி நாயனார் பேரூர் வந்துள்ளாரோ?
3 சுந்தரமூர்த்தி நாயனார் தம் துணைவியார் பரவைநாச்சியாரோடு பேரூர் பட்டீஸ்வர பெருமானை தரிசிக்க வந்திருக்கிறார்.
அவர் வருகிற நேரத்தில் ஈஸ்வரன் உழவனாகவும் உமையவள் உழவன் துணைவியாகவும் மாறி காஞ்சிமாநதி ஓரமிருந்த வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்தார். நந்திதேவரிடம் தன்இருப்பிடம் பற்றி கூற வேண்டாம் என்று எச்சரித்துவிட்டுப் போனார்
சுந்தரர் கோவிலுக்கு வந்தார். ஈசனைகாணாது திகைத்தார் நந்திதேவரிடம் விசாரித்தார். நந்திதேவா; வாயால் கூறாமல் முகத்தைத் திருப்பி ஜாடையால் காட்டினார்.
சுந்தரர் வயல்வெளிக்குச் சென்று இறைவனை தரிசித்தார் என்பது வரலாறு.
வெளிபிரகாரத்தில் நிரதி விநாயகர், தண்டபாணி, விசாலாட்சி,விசுவநாதர் ஆகியோர் ஆலயங்கள் வரிசையாய் உள்ளன. வடக்குபிரகாரம் தாண்டி கிழக்கே திரும்பி னால் அம்மன்சந்நதி பச்சைநாயகி என அழைக்கப்படுகிறார். சந்நதியின் வலப்பக்கம் துர்க் கை இடபக்கம் வரதராஜபெருமாள் தனிசந்நதிகள் உள்ளது. துர்க்கையம்மன் சந்நதிக்கு முன் உள்ள சிம்மவாகனத்தின் வாயுள் சுழலும்கல் உள்ள மாதிhp சிற்பம் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. அம்மனை தரிசித்துவிட்டு முன்புறம் வருகிறோம். பலிபிடம் இடபவாகனம்கடந்து உள்பிரகாரம் செல்கிறோம்.
தென்கிழக்கு மூலையில் மேற்கு பார்த்த சூரியபகவான்சந்நதி தென்புறம் முழுக்க அறுபத்மூவர் திருவுருவச் சிலைகள். மேற்கில் லிங்கங்கள். வடக்கு மூலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி சந்நதி. பக்கத்தில் சுந்தரமூர்த்திநாயனார் சேரமான் பெருமாள் நாயனார் சிலைகள் வடகிழக்கு மூலையில் ஞானபைரவர் நாய்வாகன மின்றி காட்சியளிக்கிறார். பேரூர் ஓர்முக்தி ஸ்தலம் என்பதால் பைரவர் வாகனமின்றி நிற்கிறார்.இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறவி கிடையாது. இதனை வலியுருத்த இங்கே பிறவா புளி, இறவாப்பனை என்பது சாட்சியாக நிற்கிறது.
4 கோவிலுக்கெதிரே புளியமரமொன்றுள்ளது இதன் விதைகள் முளைப்பதில் லை. அதேபோல் ஆற்றங்கரை ஓரமாய் ஆறுபனைமரங்கள் நிற்கின்றன. இவை பல்லாயிர மாண்டுகள் வாழ்கின்றன. இவை இறப்பதில்லை. பிறப்பு,இறப்பு இல்லை என்பதற்கு இவையே சாட்சி.
அர்த்தமண்டபத்தில் ஏராளமான கல்துhண்கள்.கோவிலுக்கு தானமளித்தவர் என்ன அளித்தார் என்பன போன்ற செய்திகள் கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது.
கருவரையில் மூலவரை கண்குளிர தரிசிக்கிறோம்..வெளியே வந்தால் நடையின் வடபுறம் புகழ்பெற்ற கனகசபை அமைந்துள்ளது. இடதுகாலைத் தூக்கியாடும் நடராசர் சிவகாமவல்லியுடன் வௌ்ளியம்பலத்தில் காட்சியளிக்கிறார். கோவிலின் சிறப்பே கனகசபையில்தான்உள்ளது. கனகசபையின் மேல் விதானத்தில் சுழலும்கல்தாமரை, கல்சங்கலிகள் நுணுக்கமாய் செதுக்கியிருப்பதுகண்டு வியக்காமலிருக்கயியலாது.
கனகசபையின் இருபுறமும் எட்டுத்தூண்களில் மிக அரிய சிற்பங்கள். நர்த்தன விநாயகர், மயில் மீது அமர்ந்த சண்முகம்,ஊர்த்துவதாண்டவர், அகோரவீரபத்ரர், அக்கினிவீரபத்ரர் பிச்சாடநர், யானையுரி போர்த்தவர் என எட்டுசிற்பங்களும் என்றும் இளமையாக தோன்றுகிறது.. இக்கோவின் ஆண்டுவருமானம் ஒரு கோடியே பதினெட்டு லட்சம் என்று பெருமையாக சொல்லி மகிழ்கிறார்கள்.
கடந்த நூற்றாண்டுக்குள் சென்று வந்த திருப்தியோடு நாமும் விடைபெறு வோமா?
-000-
இக்கட்டுரையைஎழுதியவர்:- பாரதிதேவராஜ்.எம்.ஏ.,219FBமணியகாரர்நகர்வேலாண்டிபாளையம்கோவை - 641025
1கொங்குச் சான்றோர் போற்றியசங்கமேஸ்வரர் திருக்கோவில்
1கொங்குச் சான்றோர் போற்றியசங்கமேஸ்வரர் திருக்கோவில்
கரிகாற் சோழன் காலத்தில்தான் கொங்குநாடு புத்துயிர் பெற்றது. காடுகளை இருளர் முதலானோர் துணைகொண்டு அழித்து நாட்டை உண்டாக்கினான். நாடு முழுக்க முப்பத்தாறு கோவில்களைக் கட்டி திருப்பணி செய்து முடித்தான் என்கிறது சோழன் பு+ர்வ பட்டயம் என்னும் நூல் அவற்றில் கோவன் என்ற இருளர் தலைவனைக் கொண்டு புதிய ஊர் செய்து கோவன்புத்தூர் என அழைக்கச்செய்தான் இதுவே இன்றைய கேயமுத்தூர் ஆகும். நகரின் மையத்தில் அமைந்துள்ளது சங்கமேஸ்வரர் ஆலையம்.
சங்கு பு+க்கள் மண்டிய புதரைஅழிக்கும் போது தோன்றிய லிங்கவடிவான ஈசனை சங்கீஸ்வரர் என்றும் சங்கீஸ்வரமுடையார் என்றும் அழைத்தனர். நாளடைவில் சங்கமீஸ்வரர்,சங்கமேஸ்வரர் என்றும் வழுவி அழைக்கத் தலைப்பட்டனர்.
அப்போதே கோட்டை பேட்டை குளம் அமைத்திருந்தனர் என்று வௌ்ளிங்கிரி ஸ்தல புராணம் கூறுகிறது. பல மன்னர்கள் இக்கோவிலை திருப்பணி செய்து சிறப்பித்துள்ளனர்.பராந்கசோழன்காலத்தில்கோவில் மிகவும் சிறப்புற்று விளங் கியது. விஜயநகர மன்னர்கள் காலத்திலும் பின்னர் வந்த திருமலைநாயக்கர் காலத்திலும் தான் கோவில் விரிவுபடுத்தி திருப்பணி செய்துள்ளனர். ஆங்கி லேயர் காலத்தில் கொங்குநாடு திப்புசுல்தான் வசமிருந்தது. 1792 ஆண்டு டிசம்பர் மாதம் வௌ்ளையர் கம்பெனியார் திட்டமிட்டபடி கோயமுத்தூர் கோட்டை யை அவர்கள் வசம் சிக்கவிடாமல் கோட்டையை இடித்து தரை மட்டமாக்கும் படி திப்புசுல்தான் உத்தரவிட்டான் கோட்டைமண் மேடானது. அதன்பின் அந்தபகுதியின் பெயர் கோட்டைமேடு என அழைக்கத்துவங்கினர்.
2 இதன்பின்னர் இக்கோவிலுக்கு புதியதிருப்பம் ஏற்பட்டது. அகிலாண்டேஸ்வரி அம்பாள் விநாயகர். சண்முகசுப்ரமணியர் நாயன்மார்கள் பைரவர் நவக்கிரகம் ஆஞசநேயர் என தனி சன்னதிகள் அமைத்தனர்.
தரைமட்டத்திலிருந்து ஆறடிஆழத்தில்தான் அம்பாள் சன்னதியும், ஈஸ்வரர் சன்னதியும் அமைந்திருந்தது. பகதர்கள் தரிசிப்பதற்கு மிகவும்சிரமப்பட்டனர். அதன் பின் இப்போது வாஸ்து முறைப்படி உயர்த்திகட்டப்பட்டுள்ளது.
ஆயிரமாண்டுகள் சிறப்புடன் அருள்பாலித்துவரும்ஈஸ்வரர், மக்களின் பல குறைகளை நிவர்த்தி செய்கிறார். மக்கள் நன்மைக்காக பல வழிபாடுகள் செய்யப்படுகின் றன.
கார்த்திகை சோமவரங்களில் சங்கபிஷேகம் சங்கமேஸ்வரருக்கும் அம்பாளுக்கும் செய்வது மிக சிறப்பானது.
முதல்சோமவாரமும் கடைசி சோமவாரமும் ஆயிரத்தெட்டு சங்கபிஷேகமும் இரண்டாவது மூன்றாவது வாரங்களில் நூற்றி எட்டு சங்கபிஷேகமும் சிறப் பாக செய்யப்படு கிறது.
கார்த்திகை பௌர்னமியன்று அன்னபிஷேகமும் தரிசனமும் நடைபெறு கிறது.இந்தகோவிலுக்கே உரிய சிறப்புவழிபாடாக கருதுவது அஷ்டமிவழிபாடு. கோவிலில்உள்ள மகாபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்றுநெய்தீப மேற்றி சிவப்பு அரளியால் அர்ச்சனை செய்து அன்னதானம். வுழங்குவோருக்கு குழந்தையின்மை குறை நீங்கும்.
பஞசதீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாத் துன்பங்களும் தீரும், கடன்தொல்லை தீரும். காரியசித்தி உண்டாகும். (பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணை விளக்கெணணைதேங்காயெண்ணை, நல்லெண்ணை, பசுநெய் ஆகியவற்றை தனித்தனி தீபமேற்ற வேண்டும்)
3
இவ்வலயத்தில் கொண்டாடப்படும் மற்றுமொரு சிறப்பு விழா மாசிமாத மகா சிவராத்திhp.. அன்று 108முறை வலம் வரவேண்டும். 108முறை எண்ணிக்கை மாறாமலிருக்க 108காசுகளை உண்டியலில் போட்டுவணங்குவது இக்கோவி லின் தனிச்சிறப்பு.விரதமிருந்து கணவிழித்திருந்தால் திருமண பாக்கியம் கிட்டும். சகல ஐஸ்வர்யமும்கூடும் வியாபாரம் விருத்தியாகும் நன்மக்கட்பேறு கிட்டும்..
இக்கோவில் விழாக்களில் மிக முக்கியமானதும் சிறப்புவாய்ந்ததுமாக கருதப்படுவது. சித்திரைத்திருவிழா.சித்ரா பௌர்னமி அன்று சங்கமேஸ்வரரும் சண்முக சுப்ரமணியரும் இரு தேர்களில்நகரின்முக்கிய வீதிகளில் உலா வரு வது. கண்கொள்ளா காட்சி. இந்த காடசி பல ஆண்டுகளாய் நடைபெற முடி யாதசூழ்நிலை. தோ்கள் பழுதடைந்து போனது. இப்போது 8 லட்ச ரூபாய் செல வில் புதியதேர் செய்யப்பட்டு வருகிறது விரைவில் தேரோட்டத்தை பார்க்கிற பாக்கியம் இந்த தலைமுறைக்கு கிட்டும்.
தவிர மாதத்தில் கிருத்திகை சஷ்டி, பெர்ணமி, பிரதோசம் ஆகிய உற்சவங்கள் எப்பொழும்நடைபெறுகின்றன.
இவ்வளவுசிறப்புவாய்ந்த திருக்கோவில் கோவ நகரின் மத்தியில் மாநகராட்சி கட்டிடத்தின் பின்புறம் அமைந்துள்ளது. ரயில நிலையம், பஸ்நிலையம் ஆகியவற்றி லிருந்து புறப்படும் டவுன்பஸ்கள் அனைத்திலும் செல்லலாம். டவுன்ஹால் என்ற ஸ்டாப்பில் இறங்கி தென்புறம் செல்லும் சாலையில் ஐந்துநிமிட நடையில் நமது கோவிலை அடையலாம். சாpத்திரப் புகழ் வாய்ந்த இத் திருக்கோயிலுக்கு வந்து நம் குறைகள் நீங்க வேண்டிக்கொள்வோம்.
-00000-
சங்கு பு+க்கள் மண்டிய புதரைஅழிக்கும் போது தோன்றிய லிங்கவடிவான ஈசனை சங்கீஸ்வரர் என்றும் சங்கீஸ்வரமுடையார் என்றும் அழைத்தனர். நாளடைவில் சங்கமீஸ்வரர்,சங்கமேஸ்வரர் என்றும் வழுவி அழைக்கத் தலைப்பட்டனர்.
அப்போதே கோட்டை பேட்டை குளம் அமைத்திருந்தனர் என்று வௌ்ளிங்கிரி ஸ்தல புராணம் கூறுகிறது. பல மன்னர்கள் இக்கோவிலை திருப்பணி செய்து சிறப்பித்துள்ளனர்.பராந்கசோழன்காலத்தில்கோவில் மிகவும் சிறப்புற்று விளங் கியது. விஜயநகர மன்னர்கள் காலத்திலும் பின்னர் வந்த திருமலைநாயக்கர் காலத்திலும் தான் கோவில் விரிவுபடுத்தி திருப்பணி செய்துள்ளனர். ஆங்கி லேயர் காலத்தில் கொங்குநாடு திப்புசுல்தான் வசமிருந்தது. 1792 ஆண்டு டிசம்பர் மாதம் வௌ்ளையர் கம்பெனியார் திட்டமிட்டபடி கோயமுத்தூர் கோட்டை யை அவர்கள் வசம் சிக்கவிடாமல் கோட்டையை இடித்து தரை மட்டமாக்கும் படி திப்புசுல்தான் உத்தரவிட்டான் கோட்டைமண் மேடானது. அதன்பின் அந்தபகுதியின் பெயர் கோட்டைமேடு என அழைக்கத்துவங்கினர்.
2 இதன்பின்னர் இக்கோவிலுக்கு புதியதிருப்பம் ஏற்பட்டது. அகிலாண்டேஸ்வரி அம்பாள் விநாயகர். சண்முகசுப்ரமணியர் நாயன்மார்கள் பைரவர் நவக்கிரகம் ஆஞசநேயர் என தனி சன்னதிகள் அமைத்தனர்.
தரைமட்டத்திலிருந்து ஆறடிஆழத்தில்தான் அம்பாள் சன்னதியும், ஈஸ்வரர் சன்னதியும் அமைந்திருந்தது. பகதர்கள் தரிசிப்பதற்கு மிகவும்சிரமப்பட்டனர். அதன் பின் இப்போது வாஸ்து முறைப்படி உயர்த்திகட்டப்பட்டுள்ளது.
ஆயிரமாண்டுகள் சிறப்புடன் அருள்பாலித்துவரும்ஈஸ்வரர், மக்களின் பல குறைகளை நிவர்த்தி செய்கிறார். மக்கள் நன்மைக்காக பல வழிபாடுகள் செய்யப்படுகின் றன.
கார்த்திகை சோமவரங்களில் சங்கபிஷேகம் சங்கமேஸ்வரருக்கும் அம்பாளுக்கும் செய்வது மிக சிறப்பானது.
முதல்சோமவாரமும் கடைசி சோமவாரமும் ஆயிரத்தெட்டு சங்கபிஷேகமும் இரண்டாவது மூன்றாவது வாரங்களில் நூற்றி எட்டு சங்கபிஷேகமும் சிறப் பாக செய்யப்படு கிறது.
கார்த்திகை பௌர்னமியன்று அன்னபிஷேகமும் தரிசனமும் நடைபெறு கிறது.இந்தகோவிலுக்கே உரிய சிறப்புவழிபாடாக கருதுவது அஷ்டமிவழிபாடு. கோவிலில்உள்ள மகாபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்றுநெய்தீப மேற்றி சிவப்பு அரளியால் அர்ச்சனை செய்து அன்னதானம். வுழங்குவோருக்கு குழந்தையின்மை குறை நீங்கும்.
பஞசதீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாத் துன்பங்களும் தீரும், கடன்தொல்லை தீரும். காரியசித்தி உண்டாகும். (பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணை விளக்கெணணைதேங்காயெண்ணை, நல்லெண்ணை, பசுநெய் ஆகியவற்றை தனித்தனி தீபமேற்ற வேண்டும்)
3
இவ்வலயத்தில் கொண்டாடப்படும் மற்றுமொரு சிறப்பு விழா மாசிமாத மகா சிவராத்திhp.. அன்று 108முறை வலம் வரவேண்டும். 108முறை எண்ணிக்கை மாறாமலிருக்க 108காசுகளை உண்டியலில் போட்டுவணங்குவது இக்கோவி லின் தனிச்சிறப்பு.விரதமிருந்து கணவிழித்திருந்தால் திருமண பாக்கியம் கிட்டும். சகல ஐஸ்வர்யமும்கூடும் வியாபாரம் விருத்தியாகும் நன்மக்கட்பேறு கிட்டும்..
இக்கோவில் விழாக்களில் மிக முக்கியமானதும் சிறப்புவாய்ந்ததுமாக கருதப்படுவது. சித்திரைத்திருவிழா.சித்ரா பௌர்னமி அன்று சங்கமேஸ்வரரும் சண்முக சுப்ரமணியரும் இரு தேர்களில்நகரின்முக்கிய வீதிகளில் உலா வரு வது. கண்கொள்ளா காட்சி. இந்த காடசி பல ஆண்டுகளாய் நடைபெற முடி யாதசூழ்நிலை. தோ்கள் பழுதடைந்து போனது. இப்போது 8 லட்ச ரூபாய் செல வில் புதியதேர் செய்யப்பட்டு வருகிறது விரைவில் தேரோட்டத்தை பார்க்கிற பாக்கியம் இந்த தலைமுறைக்கு கிட்டும்.
தவிர மாதத்தில் கிருத்திகை சஷ்டி, பெர்ணமி, பிரதோசம் ஆகிய உற்சவங்கள் எப்பொழும்நடைபெறுகின்றன.
இவ்வளவுசிறப்புவாய்ந்த திருக்கோவில் கோவ நகரின் மத்தியில் மாநகராட்சி கட்டிடத்தின் பின்புறம் அமைந்துள்ளது. ரயில நிலையம், பஸ்நிலையம் ஆகியவற்றி லிருந்து புறப்படும் டவுன்பஸ்கள் அனைத்திலும் செல்லலாம். டவுன்ஹால் என்ற ஸ்டாப்பில் இறங்கி தென்புறம் செல்லும் சாலையில் ஐந்துநிமிட நடையில் நமது கோவிலை அடையலாம். சாpத்திரப் புகழ் வாய்ந்த இத் திருக்கோயிலுக்கு வந்து நம் குறைகள் நீங்க வேண்டிக்கொள்வோம்.
-00000-
இக்கட்டுரையை எழுதியவர்:-
பாரதிதேவராஜ்.எம்.ஏ.,219FB மணியகாரர்நகர்வேலாண்டிபாளையம்
கோவை - 641025