Pages

Thursday, December 23, 2010

தங்கம் இதயம்பேசுகிறது- சிறுகதை




கோகுலம்,ரத்னபாலா இதயம்பேசுகிறது,தங்கம் -சிறுகதைகள்











சிறுகதை சிறப்பிதழ் மற்றும் தீபம் சிறுகதை











அமுதசுரபி- கட்டுரைகள்












தேவி-சிறுகதை


தேவி-சிறுகதை




தேவி- சிறுகதை







Monday, December 13, 2010

சிறுகதைகள்

1.என்ன தவம் செய்தனை

பொழுதுகிளம்ப வெகுநேரம் இருக்கும் போல இருக்கு. பொன்னுக்குட்டி கிழவ னுக்கு அதற்கு மேல் படுக்கையில் இருப்பு கொள்ளவில்லை. கட்டிலிலிருந்து எழுந்து கொண்டார். துண்டை எடுத்து மேலுக்குப் போட்டுக்கொண்டார்.எரவாரத்தில் சொருகி யிருந்த கைத்தடியை உருவிக்கொண்டார். திண்ணையில் கிழவி அசந்துத்தூங்கிக்கொண்டிருந்தாள்

அவளுக்கு சமாச்சாரம் தொpயாது. தொpந்தால் ஊரையே கூட்டி ஒப்பாரி வைப்பாள் எதுக்கும்தான் போய் பார்ப்போம் என்று புறப்பட்டுவிட்டார். வெளியே சொல்ல முடியாவிட்டாலும் மனசு முழுக்க மகனைப் பற்றிய சோகமே நிறைந்து அழத்துடித்தது.

இந்த பாழாப்போனவனுக்கு பத்துமணிக்கு என்ன டீ குடிக் கக்கேக்குத. அதுவும் ராத்திhp. போகாம இருந்திருந்தா அந்தசேதி காதுலேயே விழுந்து தொலைச்சிருக்காது. இப்ப இந்த அவிதியு மிருக்காது.

வேலியைத்தாண்டி படலை சாத்திவிட்டு தெருவில் இறங்கினார். என்ன சமாதானம் செய்தாலும் மனசு சுத்தி சுத்தி அந்த சேதியி லேயே வந்துநின்றது.

பொன்னுக்குட்டிஅதிகமாய் எங்கும் வெளியேவரமாட்டார். வர இஷ்டமில்லை என்பது ஒருபுறமிருந்தாலும் ஆறுவருஷத் திற்கு முன்பு தன் ஆசைமகன் எவளோ கீழ்சாதிப் பெண்ணோடு ஓடிப்போனான் என்பதை கருத்தில் வைத்து,
“என்னப்பிச்சி சத்தியனப் பத்தி சேதி உண்டா.”
“அப்பிச்சி சூலூர் சந்தைக்குப்போனனா. அங்க உன்ற மகனை யும்மருமகனையும் பாத்துபேசினே. சத்தியனெங்கியோ பண்ணைக் போறானாம். கஷ்ட ஜீவனந்தா. சோளம் வாங்கீட்டிருந்தாங்க. ஏண்டா தம்பி சோளக்கஞ்சிவச்சா குடும்பம் நடத்துறே. உனக் கேண்டா தலைவிதின்னேன். ‘வேறே வழி’ங்றான் நாந்தா போடா

2
போக்கத்த பயலே அவளே எங்கயாச்சு ஓட்டியுட்டுட்டு ஊர் வந்துசேருன்னுட்டு வந்தேன்.

இதுமாதிரி ஏதாவது ஊர்சனங்க சொல்றத காது கொடுத்துக் கேக்கமுடியவில்லை இதனால் வெளியே வருவதையே விட்டொ ழித்துவிட்டார். பொன்னுகுட்டியின் மனைவி கிட்னம்மா கூட,
“இப்படி திண்ணையிலேயே பொழுதன்னிக்கும் தடியப்புடிச் சுட்டே குக்கிட்டி ருந்தா எப்பிடி. கோவில்மேட்லே சித்த உக்காரு. பக்கதாலே ரொட்டிக் கடைக்கு போயி ஒரு பன்னத் தின்னுட்டு டீ யக்குடிச்சிட்டுவா. இல்ல மொள்ள அப்படியே ரெங்கசாமி கோவி லுக்குப் போ. அய்யிரு நல்லதா ஏதாச்சும் சொல்வாரு. இப்படி கெடையிலேயே கெடக்காதே.பயித்தியந்தா புடிச்சுக்கும். அரும மகந்தா புலோக ரம்பையக் கூட்டீட்டு ஓடிப் போயிட்டான் அதே நெனப்பு இனியும் எதுக்கு எந்திரிச்சு போ சாமி.”
என்பாள். எல்லாம் பழகிக் கொண்டாச்சு.
--000-
வாரியார்சாமி ராமர்கத சொல்றார்னு வயித்துப்புள் ளத்தாச்சியா இருந்த கிட்னம்மாவக் கூட்டிட்டு பத்துமைல் வண்டி கட்டிட்டு தினமும் கேக்கப்போனார்பொன்னுகுட்டி.ராமர்பிறந்த கதைய சொன்ன அண்ணிக்கிதான் கிட்னம்மாவுக்கு வலி வந்துச்சு. நல்ல வேளை பக்கத்திலேயே ஆஸ்பத்திரி இருந்தங்காட்டிக்கு உடனே சேத்து இவம் பொறந்தான் சத்தியவந்தன் ராமர் மாதிரி இருக்கணும்னு பொன்னுகுட்டி அவனுக்கு சத்தியன்னு பேர்வச் சார்.
ராமர் காட்டுக்குப் போயி தசரதர் புத்திர சோகத்திலே படுறபாட்டை வாhpயார் சாமி சொல்லச் சொல்ல பொன்னு குட்டிக்கு கண்லே தாரதாரையா நீர் வடிஞசது.அன்னிக்கு வு+ட்டுக்குவந்துங்கூட விடிய விடிய அழுதார்.அப்படி ஒரு சோகம். வரக்கூடாதுன்னு வேண்டாத சாமியே கெடையாது.

ஆனா அவரோட வாழ்க்கையிலேயே வந்துடுச்சே! ஆசை ஆசையா வளத்து அருமையா இங்கிலிஸ் பள்ளிக்கூ

3
டத்துக் கெல்லாம் அனுப்பிபடிக்கவச்சார். அhpசிச்சோத்தத் தவிர வேறே எதையும் கண்ணுலகூட பாத்ததில்லே. அப்பேர்பட்ட மகன் சோளக்கஞ்சி குடிக்கிறான்னா மனசு என்ன பாடுபடும்.
ஊருக்குள் புகுந்து ரொட்டிக் கடையைத் தாண்டும் போது அந்த பழைய பேப்பர் செய்தியை யாரோ உரக்கப் படித்துக்கொண்டிருந்தார்

“பீலிஊரைச் சார்ந்த சத்யன் என்பவர் வயது30 இவர் அதே ஊரைச்சேர்ந்த பட்டியம்மாள் வயது24 என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற் போது பாப்பம் பட்டியில் இருவரும் கூலிவேலை செய்து பிழைத்து வந்தனர். கடன் தொல்லை தாங்காது சத்யன் விஷம் குடித்து இறந்து போனார். விஷயமறிந்த காவல் துறையினர்….”

பொன்னுகுட்டியால் அந்தசேதியை ஜீரணிக்க இயலவில்லை. மவன் செத்துப் போயிட்டானா. துக்கம் தொண்டையை அடைக்க அழுகை பீறிக்கொண்டு வந்தது. யாராவது பார்த்துவிட் போகி றார்கள் என்றுதுண்டால் வாயைபொத்திக்கொண்டார்.மனசு விட்டு வாய்நிறைய சத்தம் போட்டு அழவேண்டும் போலிருந்தது. அழுதால்தான் மனசு ஆறும் போல இருந்தது. ஊருக்குவெளியே குட்டையை நெருங்கிக்கொண்டிருந்தார்.சுமை தாங்கிக் கல்லருகே போய் உட்கார்ந்து கொண்டார். இருளைகிழித்துக் கொண்டு காந்தி புரம் போகும் பஸ்வந்து நின்றது.

சட்டென்று தாவி படிக்கட்டில் கால் வைத்ததும் பஸ்கிளம் பியது கம்பியை இருகையால் சரியாகப்பிடிக்காததால் ஆடி விழப் போனார்.
“ ஏம் பெரிசு நீ சாகரதுக்கு எம் பஸ் தானாகெடச்சது.”
“ அ ஆம் போ.” கண்டக்டரின் கையைப்பிடித்து ஒர சீட்டில் அமர்ந்தார். பஸ்ஸில் நாலைந்து பேர்தான் உட்கார்ந்திருந்தனர் கண்டக்டர் போட்ட சத்தத்தில் தூக்கம் கலைந்தவர். திரும்பிப் பார்த்தார்.


4
“ அட என்னங் மாமா மணி ஆறுகூட ஆகலே இந்நேரத்துக்கெங்க கிளம்பீட்டே.”
“ அடடே சுப்ராயனா.”
“ மாமா கேள்விப்பட்டது நெசந்தானா?”
“ எதை கேக்கறே”
“ நம்ப நஞசப்பந்தா பேப்பர்லே என்னவோ போட்டிருக்குன்னு சாயந்தரம் உளர்னா,”
“ யாருக்கு தொpயும்.”
“ போன வாரம்தான் சந்தையிலே பாத்தானாம்.”
“ ஆமாமா எங்குட்டையும்தா சொன்னா.”

“எப்படி இப்படி”
“ அவம் விதி. அஞசங்கணம் ஊடு. ஆறேக்கறா தோட்டம் மாடுகண்ணு ஊரு சொந்த சனங்க இத்தனை பேரு இருக்கறப்ப எங்கயோ போய் தொலைஞ்சிருக்கானே பாவிமகன்..”
அவரையும் மீறி அழுகை பீறிட்டது. “அழுகாதீங்க மாமா.மனசைத்தேத்திகங்க. நானுமுங்க கூடத்தான் வர்றேன்.” “எதுக்கு” என்பதுபோல பார்த்தார்பொன்னுகுட்டி..
“நீங்க அக்காகிட்டகூட சொல்லாம வந்திட்டிங்களாமா.இந்த நாரவாயன் நஞ்சப்பன் தா ராத்திhp அக்காகிட்டயும் சொல்லிப்போட்டானாம்.. உங்களுக்கு தொpயக் கூடாதுன்னு ஒண்ணும் சொல்லையாம். .ராத்திhp பு+ராவும் நீங்க படறபாட்டை பாத்துட்டுதா இருந்துச்சாம். சொல்லாம கொள்ளம புறப்பட்டதை பார்த்ததுமே அக்காவுக்கு புhpஞ்சு போச்சாம். நீங்க மகன பாக்க பாப்பம்பட்டி பொறப்பட்டீங்கன்னு விசுக்குன்னு எங்கூட்டுக்கு
ஓடி வந்து சீக்கிரமா போய் பஸ்ஸப்புடிக்கச் சொன்னா. நா குறுக்குத்தடத்தில ஓடிவந்து பஸ்ஸப் புடிச்சு வர்றேன். அதுக்குள்ள குட்டைப் பக்கம் வநற்துட்டீங்களே. நான்தான பஸ்ஸை நிறுத்தச்சொன்னேன்.”
“சேதி அப்படியா கிட்னம்மாளுக்கும் விசயம் தொpஞ்சு போச்சா சாpயான கைகாhp.”
5
கண்டக்டர் காந்திபுரத்துக்கு டிக்கெட்டை கொடுத்தார். ஆப்பாரசட்டை பையில் துழாவி பத்து ருபாய் நோட்டைத் தந்தாh;
“நீ டிக்கெட் வாங்கிட்டயா.”
“ நா அங்கயே வாங்கிட்ட மாமா.”
பஸ்ஸின் ஆட்டத்தில் அவா;களுடைய பேச்சு அடிபட்டுப்போய் மௌனம் நிலவியது.
“ஏண்டா சுப்ராயா?”
“ஏனுங்க மாமா?”
“அங்க பாப்பம்பட்டியில அவனூடு எவடதாலக்காம்?”
“ அதென்னமாமா பொpய பட்னமா. பட்டிக்காடுதானே மிஞ்சிப்போனா நாலுசந்திருக்கும். அதுவுமில்லாம போலிஸ் கேஸ்வேறே ஊரே தேர் கூட்டமா கசமுசன்னு பேசிட்டு நிப்பாங்க. கண்டுபிடிக்கறதொண்ணும் கஷ்டமில்லே மாமா.”

“என்னவோ போப்பா அறுபதுவயசிலே நா இப்படி இருக்கோணும். அவங்காhp யத்ததை நாம் பாக்கோணும்னு இருக்கு.”
“என்னங் மாமா சொல்றீங்க?”
“இன்னுமென்னத்தச் சொல்றது. யாரென்ன சொன்னாலும் சொp. ஊரே எதுத்தா லும் சொp. என்றமகனே எந்தோட்டத்திலே தான் அடக்கம் பண்ணனும்னு தீர்மானம் பண்ணிப் போட்டம் போ.”
“அதெப்படிங்க மாமா முடியும் ஊர் கட்டுப்பாடுன்னு ஒண்ணு இருக்குதுல்லோ. குலத்துக்குப் பொpயவங்க நீங்க. நீங்களே இப்படி…”
“கொலமாவது கோத்தரமாவது அதையிதையிஞ் சொல்லித்தாண்டா அவன ஊரவுட்டே ஓட்னீங்க உப்ப உசிருக்கே ஒலையும் வெச்சுப்போட்டிங்க.சுப்ராயா சனங்க நடக்கற மாதிhp இந்த கொங்குமண்ணிலே நடந்ததே இல்லே. ராசாக் காலத்திலேகூட இந்த கொங்குமண்ணுலே சாதி பிரச்சனை கெடையாது. அதததுக்கு பட்டயமே போட்டுப் போட்டான்.

6
வீட்டுக்கு வௌ;ளையடிக்கறது, செத்தா ரெண்டுசங்கு வைக்கறது செருப்புப்போட்டுட்டு ஊருக்குள்ளே வாரதுன்னு இதுக்கெல்லாம் கூட அனுமதி தந்து சாதிப்பிரச்சனையே வராம இருந்தமண்ணு இந்த மண்ணு. அதுமட்டும் புள்ளப்பெத்தா கொழந்தைய வளக்க றது,குளிப்பாட்டறது,ஏன்புள்ளைஅழுதாமுலைப்பால் கொடுக்கறது கூட அந்தமாதாரிபுள்ளைகதான். என்னவோ இப்பத்தான் கீழ்சாதி கீழ்சாதின்னு நெம்பத்தான் ஆடறானுக.
“என்கென்னவோ சத்தியன் செத்துட்டான்னே மனசு ஒப்பமாட் டீங்குது மாமா.”
“பேப்பர்லே போட்டிருக்கானேடா சுப்ராயா.”
“பேப்பர்லே போடறதெல்லாம் நெசமாயிடுமா?”
பஸ் காந்திபுரத்தை நெருங்கியது. மத்தியபஸ் நிலையம் மணி எட்டைக் காட்டி கலகலத்துக்கொண்டிருந்தது.
“மாமா கடையிலே ஏதாவது சாப்புட்டுபோட்டு போலாங்களா? அங்க பாப்பம் பட்டிலே சாப்பிடறதெல்லாம் தோதுபடாது. அதுவு மில்லாம இனி எந்நேரமாகுதோ?”
“எனக்கொண்ணும் வேண்டாம். நீ வேண்ணா சாப்புடு.”
“எனக்கும் ஒண்ணும் வேண்டாம். நீங்க பசிதாங்கமாட்டீங்க. பரவால்லே ரெண்டு பேரும் சாப்புட்டுபோட்டே போலாம் வாங்க.”

இருவரும் எதிரே இருந்த காப்பிக்கடையில் சாப்பிட்டுவிட்டு திரும்பினார்கள். பாப்பம்பட்டி போகிற பஸ் தயாராய் நிக்கவும் அதில் ஏறப் போனார்கள். பஸ் புறப்பட இன்னும் நேரமிருந்தது. பஸ்ஸில கூட்டம்; நிறைய இருந்தது. இளவட்ட பையன்கள் நாலைந்து பேர் பஸ்ஸூக்கு வெளியே நின்று கொண்டு வருகிற போகிறவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தனர்.
பொன்னுகுட்டியும்,சுப்ராயனும்பஸ்ஸில் ஏற முயன்றார் கள். கூடீ நின்ற கும்பலில் ஒருவன்,
“பெரிசு எதுவரைக்கும்?”
“பாப்பம்பட்டிக்குதாங் கண்ணு.”

7
“ஆரூட்டுக்கு?”
“ ஆரூட்டுக்குமில்லே. நேத்துசாயந்திரம் பேப்பர்லே போட்டிருந்துச்சே சத்தியன்னு விசங்குடுச்சு….”
“ அடடே பாடிய ராத்திhpயே பொpயாஸ்பத்திhpக்கு கொண்டு போயிட்டாங்க. அவங்க சம்சாரம்கூட ஆஸ்பத்திரிக்குத்தான் போயிருக்கு.ஊர்லேஅவங்களுக்கு யாருமில்லே.அங்கபோய் யாரப் பாக்கப்போறீங்க?”
“ அட அப்பிடியா. நல்லதாப் போச்சு. அப்ப பெரியாஸ்பத்திரிக்கே போயிர்லாங்க மாமா.”
“ ம் சொp பொpயாஸ்பத்திரிக்குப் போற பஸ்ஸப் பாரு.”

பெரியாஸ்பத்திரி காலைவேளைசுறுசுறுப் போடு வேகமாய் இயங்கிக் கொண்டிருந்தது. வௌ;ளை யுடுப்பில் கையில் ஸ்டெ தாஸ்கோப்புடன் கும்பல் கும்பலாய் மருத்துவக்கல்லூரி மாணவ மாணவிகள் அரட்டையுடன் போயிக்கொண்டிருந்தனர். ஓவ்வொரு வார்டிலும் நோயாளிகள் வாpசையில் டாக்டர் தரிசனத்திற்குக்காத்திருந்தனர் ஸடச்சர் வண்டி அவ்வப்போது கிறீச் கிறீச் என்ற சத்தத்தோடு போயிக்கொண்டிருந்தது.
பொன்னுகுட்டியும் சுப்ராயனும் எந்த பக்கம் போவது யாரைவிசாரிப்பது என்பது தெரியாமல் விழித்துக்கொண்டி ருந்தனர்.
இடதுபுறம் மேல் கோடியில் கூட்டம் அதிகமாயி ருந்தது.
“மாமா அங்க பாருங்க அதுதான் சாவுரூம் அஙகதான் பொணத்த அறுப்பாங்க. வாங்க போய் பாக்கலாம்.
அதுவரை மறந்திருந்த துக்கம் மறுபடியும் பீறிக் கொண்டுவர பொன்னுகுடடி தன்னையும் மறந்து,
“என்ற ராசா உன்னை இந்தக் கோலத்துல பாக்கவா தவமிருந்து பெத்தேன்.ராமரப்போல நெனைச் சேனே. இப்படிப் பண்ணிப்போட்டியேடா பாவி.”
-

8
என்று கதறி வாய்விட்டழுதார்;.அவருடைய ஓலம் சுற்றி நின்றவர்களையும் கலங்கச் செய்துவிட்டது.
கூட்டத்தில் யாரோ சுப்ராயனின் தோளைப் பற்றுவது உணர்ந்து திரும்பினார். சுப்ராயன் கண்ட காட்சியில் அதிர்ச்சி யுற்று,
“ மாமோய் இங்க திரும்பிப்பாருங்க. இந்த அதிசயத்தை.”
சட்டென்று. திரும்பிய பொன்னுகுட்டி கண்டகாட்சியில் ஆடிப்போனார்.
“அட என்ற ராசா. ஊன்ன செத்துப் போயிட்டானுட்டானு ங்களே.”
“ இல்லப்பா நா சாகலே.”
“ அப்ப பேப்பர்லே போட்டது.”
“ அது நம்மூர் அய்யர்மகன் சத்தியநாராயணன்பா. அவனும் பாப்பம்பட்டிலே தான் குடியிருக்கான்.
“அப்ப பட்டியம்மான்னு போட்டிருந்ததே.”
“எம்பொண்டாட்டி பேரு பட்டத்தரசிப்பா.”
“ எப்படியோசாமி எங்கமாமா வேண்டுன சாமிக கையுட லங்கறதே போதுங்க சாமி இனி எவனெதுத்தாலும் சரி. எந்த சாதியும் நமக்குத் தேவையுமில்லே. இனி நீங்க பீலிஊர் மண்ணுலேதான் பொழைக்கோணும்.”
என்று உணர்ச்சி பொங்க சுப்ராயான் சொன்னார்.

-00000-












9
2 அன்பாலே தேடிய என்…

“திங்கட் கிழமை பாக்கலாம்; சீயு+.” பஸ்ஸைவிட்டு இறங் கிய தாரணி கை அசைத்தாள். பஸ் போய்விட்டது. பஸ் ஸ்டாப்பில் கண்ணுசாமி மட்டுமே நின்றிருந் தார் சட்டென்று,
“என்ன தாரணி மேடம்.”
“அட அதெப்படி நாந்தான்னு கரெக்டா கண்டுபிடிச்சீங்க?”
“:மேடம் எனக்கு கண்ணு மட்டும்தான் பாக்க முடியாதே தவிர மத்த எல்லா பாகங்களும் உங்களவிட டபுளாவேலை செய்யும் ஒரு குரலெ ஒருதடவை கேட்டாலே ஆழமா பதிவாயிடும் அடுத்தமுறை அந்தக் குரலை கேட்டவுடனே இன்னார் தான்னு தொpஞ்சுடும்.”
“சூப்பர்!” தாரணி கலகலவென்று சிரித்தாள்.
“சரி இன்னிக்கு சனிக்கிழமை. ஆபிஸ்லெ வேலையி ருக்கோ?”
“இல்லே கண்ணுசாமி பேங்க வரைக்கும் போகணும்.”
“அப்ப சவுகர்யமா போச்சு. நானும் அங்கதான் போகணும். கூட்டிட்டு போறீங்களா?”
“ஓயெஸ் போலாமே.”
“என்ன பேங்கலே பணம் எடுக்கணுமா?”
“இல்லே கண்ணுசாமி. ஒரு லோன் விசயமா மானேஜரப் பாக்கணும்.”
“சாரி மேடம்.உங்களுக்கெதுக்கு லோன்?”
“அட.நா என்ன அவ்வளவு பெரிய ஆளா. வீட்லே வரன் பாத்துட்டிருக்காங்க. திடீர்னுமுடிவாயிட்டா பணம் தேவைப் படுமே. அதுக்கோசரம்தான் அட்வான்சா கேட்டுவைப்போமேன்னு.”
“வாழ்த்துகள் மேடம். மணி என்னாச்சு?.”
“ஒம்பதரை ஆறது.”
“இன்னும் அரைமணி நேரமிருக்கே பேங்க் தெரக்கறதுக்கு.”
“ஆமா கண்ணுசாமி. ஆபிஸ் பக்கந்தானே அங்கே போய் கொஞ்சநேரம் இருந்துட்டுபோனா சரியாயிடும்.”

10
“அதுவும் சரிதான். ஆபிஸ் இன்னிக்கி தொறந்திருக்குமில்லே?”
“ஜி.எம் வருவாரு ப்யுன்நடராஜன்கூட வந்திருப்பார்.”

“அப்ப நடராஜ் கையாலே காப்பி சாப்பிட்டு போலங் கறீங்க.சரிபோயிடலாம்.”
தாரணிக்கு இந்த வைகாசியோடு இருபத்தைந்து முடிகிறது. நல்லசிவந்த உடல்.கட்டான தேகம். எவரையும் வசிக ரிக்கும் தன்மை.
ஆபிஸ் வந்துவிட்டது.
“அடடே கண்ணுசாமி. வாங்க இந்தப் பொண்ண எங்க புடுச்சீங்க”
“என்ன நடராஜன் சார் பேங்க் போலாம்னு புறப்பட்டேன். ஊர்லேருந்து பஸ்ஸப்புடுச்சு காலேஜ் பஸ் ஸ்டாப்பில வந்து இறங்கிட்டேன்.ரோட கிராஸ் பண்ணலாம்னு நின்னுட்டிருந்தப்ப தாரணி மேடம் வந்தாங்க. அவங்களும் பேங்குக்குத்தான் போறேன் னாங்க அது சாpன்னு வந்தேன். மணி ஒம்பதரைதான் ஆச்சு.கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்னு ரெண்டு பேரும் வந்தோம்.”
“பாரப்பா அவனவன் ஆபிஸ்லே வேலை செய்யறதுக்கு வந்தா நீங்க ரெஸ்ட் எடுக்க வர்றீங்க. காபி சாப்பிடறிங்களா?”
“அப்புறம் அதுக்குத்தான் வந்திருக்கோம். போயிட்டு சீக்கரமா வாங்க.”
காசை பர்சிலிருந்துஎடுக்கப்போனார்கண்ணுசாமி.அதற்குள் தாரணி யே கொடுத்தனுப்பினாள்
“கண்ணுசாமி உங்களுக்கு பொறந்ததிலிருந்தே கண் தெரியாதா?”
“பொறந்தப்பல்லாம் கண்ணு நல்லாதான் தெரிஞ்சது. மூணாவது படிக்கற வரைக்கும் கண்ணு தெரிஞ்சுட்டுதான் இருந்துச்சு. கொஞ்ச நாளைக்கப்புறம் விஷக்காய்ச்சல் மாதிரி வந்துச்சு. கண்ணு அப்ப நீலநிறமா தெரிய ஆரம்பிச்சுடுச்சு. அந்த நேரத்திலே புளியங்கா அடிக்க எவனே வீசின கல்லு என்
11

கண்ணுலேபட்டு காயமாயிடுச்சு. ஆஸ்பத்திரிககு போகாம எண் ணெயக்காய்ச்சி கண்ணுலே விட்டாங்க. அப்புறம் கொஞ்சமா தெரிஞ்ச பார்வையும் சுத்தமா போயிடுச்சு. அப்புறம் நா பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.நா இருக்கிறது கிராமந்தானே கக்கூஸ் வசதியெல்லாம் கிடையாது. ஊருக்குவெளியே காட்டுக்குள்ளதான் போகணும். கண்ணுதெரியாத நா தனியா போகமுடியாது. தம்பி தான் கூட்டிட்டு போகணும்.. அவம்பண்ற அட்டூழியம் சொல்லித் தீராது.சோறுபோடற அம்மா ஒருபக்கம் செத்துப்போற மாதிரி பேசு வா. தம்பிஒருபக்கம் இதனால சாப்பிடறதயே நிறுத்திட்டு தண் ணியக்குடிச்சுடே காலத்த ஓட்னே. வாரத்துக்கொருதாட்டி அப்பா டவுன்லேந்து வருவாரு. அவருதான் எனக்கு அனுசரணையா நடந்துப்பாரு. கொஞ்சநாள் அவரால சகிக்க முடியாம கிருஸ் டியன் ஹாஸ்டல்ல சேத்தாரு.
அங்கதான் பத்தாவது வரைக்கு படிச்சேன் சேர் பின்ற தொழிலகத்துக்கொடுத்தாங்க. பெரிய பெரிய ஆபிஸ்லே வேலை கிடைச்சது என்னமாதிரி இருக்கறவங்களவச்சு காண்டராக்ட் எடுத்து செய்யறேன் ஏதோ ஒரளவுக்கு வசதியா இருக்கேன். இப்ப வீட்லேதாங்குதாங்குன்னு தாங்கறாங்க. ஆனா அது எனக்கு இஷ்டமில்லை. உங்களமாதிரி நாலு நல்ல சனங்ககூட பழகறதே மனசுக்கு நிம்மதி தருது. அதுசரி என்றகத பெரிசு அது இன்னக்கி தீராது.நடராசண்ணே வந்தாச்சுபோலிருக்கு காபி மணக்குதுங்க தாரணி மேடம்”
“ஆமா சாப்பிடுங்க.மணி பத்தரையாச்சு புறப்படலாம்.”
00000
பாங்கில் ஏகப்பட்ட கூட்டம். தாரணி,
“கண்ணுசாமி உங்களுக்கென்ன பணமெடுக்கணுமா?”
“இல்ல மேடம்.பாஸ்புக் என்ட்hp போடணும். நா பாத்துக் கிறேன். நீங்க மானேஜரப் பாத்துட்டுவாங்க.”
தாரணி மானேஜர் அறைக்குள் நுழைந்த ஐந்தாவது நிமிடத்தில் வெளியே வந்தாள். கண்ணுசாமி பாஸ்புக் என்ட்hpயை போட்டுவிட்டு சோபாவில் அமர்ந்திருந்தார்.

12
“கண்ணுசாமி போகலாமா?”
“என்ன மேடம் அதுக்குள்ள வேலைமுடிஞ்சிடுச்சா?”
“இல்லே கண்ணுசாமி. மானேஜர் ரொம்ப பிஸியாம்.அடுத்தவாரம் வரச்சொன் னார்” அதே சமயம் தாரணி ஹேண்ட் பேக்கில் செல்போன் அழைத்தது.
“ஹலோ”
“நா அம்மா பேசறேன். அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சுவலிக் குதுன்னார். சரவணா ஆஸ்பத்திரியிலே சேத்திருக்கோம.; நீ உட னே புறப்பட்டுவா.”
“கண்ணுசாமி அப்பாவுக்கு உடம்பு முடியல் லே.ஆஸ்பத் திரிலே சேத்திருக்கா.
“நா புறப்படட்டுமா?”
“ மேடம் உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா,நானும்கூட வரட்டுமா ஒரு ஆட்டோ புடுச்சு போயிரலாமா?”-என்று கண்ணு சாமி கேட்கவும்,தாரணிக்கு என்ன செய்வ தென்று தெரியவில்லை. ஆஸ்பத்திரி பக்கம்தான் இருந்தாலும் இவர் எதற்கு. இவரைபாக்கவே ஒரு ஆள் வேணும். இவர் வந்து என்ன செய்யப் போகிறார். இருந்தாலும் அவளது உள்மனசு அவரை அழைத்துப் போக அனுமதிக்கவே,
“சரிவாங்க.” என்று ஒருஆட்டோவைப் பிடித்து ஆஸ்பத்திரி க்கு விரைந்தார் கள்.
வாசலில் தாரணியின் அம்மாவும் தங்கையும் நின்றி ருந்தனர்.
“அக்கா அப்பாவ ஐசியுலே அட்மிட் பண்ணியிருக்கா உடனே இருவத்தையாயிரம் கட்டணும்றா என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல்லே. நம்மகிட்டே காசே கிடையாது. உன்னட நகை ஏதாச்சு வச்சு பணம் ஏற்பாடு பண்ணலாமாக்கா.”
“என்னோட நகைய வச்சாக்கூட அவ்வளவு தேறாதே. உள்ளே அப்பாவ பாக்கமுடியுமா?”
“இல்லக்கா யாரையும் பாக்க அலவ் பண்ணமாட்டா.”

13
“கண்ணுசாமி அப்பாவ ஐசியு+லே வச்சிருக்கங்களாம். யாரையும் உள்ள அனுமதிக்கமாட்டாங்களாம் நீங்க எப்படி. இங்கிருந்து ஏழு லே போய் காந்திபுரத்திலே இறங்கிஅங்கிருந்து செம்மேட்டு பஸ் புடுச்சு ஊருக்குப் போயிடுவீங்களா?”
“மேடம் தப்பா நெனச்சுக்காதீங்க பணம் ஏதோ வேணும்னு சொன்னமாதிரி கேட்டுச்சு. எவ்வளவு வேணும்னு தெரிஞ்சாநா ஏதாவது உதவி பண்ணலாம் இல்லையா?”
“அவ்வளவு பணம் உங்க கிட்ட இருக்குமா? இருபத் தஞ்சாயிரம் வேணுமா. இன்னும் எவ்வளவு தேவைப்படுமோ தெரியல்லே. பேசாம ஜி.எச் சுக்குப் போயிர்லாமான்னு யோசனை பண்றேன்.”
“மேடம் இந்த ஹேண்ட் பேக்க வாங்கிக்கங்க. அதிலே அம்பதாயிரம் இருக்கு. என் தம்பி கல்யாணத்துக்காக எடுத்தேன் அதவிட இதுதான் முக்கியம். இன்னும்வேணாலும் பாங்க்லே இருக்கு எடுத்துக்கலாம் நீங்க ஆஸ்பத்திரிக்கு எவ்வளவு பணம் கட்டணும்னு பாத்து கட்டுங்க.”
தாரணிக்கு பொட்டில் அறைந்த மாதிரி கிருகிருத்துப் போனது. ஏதை நம்பி எதற்காக கொடுக்கிறார்.
“ மேடம் நீங்க எந்த யோசனையும் பண்ணவேண்டாம் நா எந்த எதிர்பார்ப்புலேயும் இதைகொடுக்கலே. மனிதாபிமானம்தான் உங்களுக்கு உதவரதுக்கு இப்ப எங்கிட்ட இருக்கே அதுக்காக கடவுளுக்குதான் நன்றி சொல்லணும். எடுத்துக்கங்க.”
00000
பத்து நாட்களில் அப்பா தேறி வீடு வந்து சேர்ந்தார். தாரணியை பெண் பார்த்து விட்டுப் போனவர்கள் அப்பா நிலையால் ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆகிட்டால் அப்புறம் சீர்செனத்தியெல்லாம் யார் செய்வார்கள். அதற்காக ஒருலட்ச ரூபாய் முதலில் கொடுத்துவிட வேண்டும் என்று கண்டிசன் போட்டார்கள் இப்போதை நிலையில் கல்யாணம் செய்யவே முடியாத நிலை. அப்பாவின் உடல் தேறவே அங்கே இங்கே என்று கடனை வாங்கி இருக்கிற நகையெல்லாம் பாங்கில்

14
வைத்து அப்பாவை பிழைக்க வைக்க வேண்டியிருந்தது. கடைசியில் எங்களால் இப்போதைக்கு முடியாது. நீங்கள் வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டாள்.
மாலைமணி நான்கிருக்கும். பத்துநாள் அலைந்த களைப்பில் எல்லோரும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.கதவை தட்டும் ஓசை கேட்டது,
தாரணிதான் கதவைத் திறந்தாள். கண்ணுசாமியும் அவர் அப்பாவும் நின்று கொண்டிருந்தனர். தாரணியின் மனசுக்கு இதமாயிருந்தது.
“வாங்க கண்ணுசாமி .அப்பாவா?”
“ஆமாம்மா.”
அப்பாவைப் பார்த்து ஒரு கூடை பழங்களை எடுத்து வைத்தார்கள்.
கண்ணுசாமிக்கு எப்படி நன்றி செலுத்துவதென்றே தெரியவில் லை. அன்றுமட்டும் அவர் பணம் கொடுத்துதவவில்லை என்றால் அப்பா பிழைத்திருக்கவே வாய்ப்பில்லை. அதுமட்டுமா அன்று முழுக்க ஆஸ்பத்திhp வாசலிலே காத்திருந்து விசாரித்துக் கொண்டே யிருந்தார். இந்த பத்துநாளும் தினமும் ஒருமுறை யேனும் வந்து விசாரித்துவிட்டு செல்வார். அவருடைய அப்பா தன் அப்பாவிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
“எம் பையனுக்கு கண்ணுதா குருடா போச்சு. வேறே எல்லாம் சம்பாரிச்சுட்டான். ஒருகல்யாணத்தையும் பண்ணவேண்டியது என்கடமை. ஆனா பார்வையில் லாதவனுக்கு யார் பொண்ணு தருவா. எந்தப்பொண் கட்டிக்க வருவா?”
-தாரணியின் மனசு சட்டென்று முடிவெடுத்தது,
“அப்பாஅவங்களுக்குஆட்சேபனையில்லைன்னா நான் அவரை ஏத்துக்கறேன். உங்களுக்கு பணஉதவி செஞ்சதுக்குமட்டுமில்லே அவரை முன்னாடியே மனசுலே விரும்பிட்டுதான் இருந் தேன். சரியா கண்ணு. ..சாரி சரிங்களா?



15
“சரிதான்.” என்பதுபோல கண்ணுசாமியும் ஆமோதித்தான் மனதுள் அவள்மேல் ஒருதலைக் காதலாயிருந்தது இவ்வளவு விரைவில் கனியும் என்று எதிர்பார்க்கவேயில்லை.

-00000-

3.என் ஆசை உன்னோடு

ஏழு மணிக்கே வெய்யில் சுர்ர்ரென்று உறைத்தது.
சீதாவை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போக வேணடும்.
மாதத்தில் இரண்டாவது புதன்கிழமை டாக்டரிடம் சீதாவை காட்ட வேண்டியநாள். எது எப்படி இருந்தாலும் அன்றைக்கு ஒத்திப்போட முயலுவதில்லை. இது அவள் வாழ்க்கைப் பிரச் சனை, நான்காண்டுகள் ஒரு சடங்கு போல தவறாமல் நடந்து வருகிறேன்
“சீக்கிரம் புறப்படும்மா. நாழியாறது. லேட்டா போனா டோக்கன் கிடைக்காது.”
“இதோ வந்துட்டேன்பா”- சமையல் அறையிலுருந்து சீதாவின் குரல் வந்தது.
செருப்பை மாட்டிக்கொண்டு வாசலுக்கு வந்தபோது எதிர்வீட்டில் ஆட்டோ ஒன்று படபடப்போடு வந்துநின்றது. அதிசயமாய் யாரென்று நிமிர, எதிர் வீட்டு மணி நாலைந்து சூட்கேசுகளுடன் தோளில் ஒரு ஜோல்னா பை தொங்க இறங்கியது தெரிந்தது.
சட்டென்று முகம் மாறியது உள்ளே போகலாமா என்று தயங்கியபோது, “குட்மார்னிங் அங்கிள்“ அவன் பழசை அடியோடு துடைத்துவிட்டுச் சொன்னான்.எனக்கும் தயக்கம் குறைந்தது.
“குட்மார்னிங் மணி. சௌக்கியமா?
“நல்ல சௌக்கியம். எங்கியோ புறப்பட்டீங்க போலிருக்கு.”
நடையில் சீதா செருப்பை மாட்டிக்கொண்டிருந்தாள்.
“ஆமா மணி. டாக்டர்கிட்ட போகணும். சாயந்திரம் பாப்போம்.”
16

அவனை அப்போதைக்கு கழட்டி விட்டேன்.
“ஓகே! அஙகிள் சீயு.” அதற்குள் அவன் அம்மா பெட்டிகளைத் தூக்கிப்போனாள். அவன் ரொம்பவும் இங்கிதமானவன்தான். சீதா அவனைப் பார்க்கும் முன் உள்ளே போய் விட்டான்.
மணிரொம்பவும்நல்லஇளைஞன்தான்.வயது இருபத்தெட்டி ருக்கும்.சிவந்தமேனி. சுருட்டையாய் முடி.அகன்ற முகம். எடுப் பான மூக்கு.தேக்குக்கட்டை போன்ற அகன்ற தோள்கள் உயரம் கூட இப்போது கூடிவிட்டான்.யாரிடமும் பழகும் வெள்ளை உள்ளம்.
ஐந்தாணடுகளுக்கு முன்பாக முதல்முதலாய் இந்த வீட்டுக்கு வந்த போது அறிமுகமானவன் ஐம்பது வயதுநிரம்பிய என்னோடு மிக நெருங்கிய நண்பனாகிப்போனான். ஏதோ கம்பெனியில் சேல்ஸ் எக்ஸிக்யுட்டாக பணி புரிகிறான். கணிசமான சம்பளம். புதுப் படம் ஏதாவது ரிலீஸானால் போதும் உடனே ரிஸர்வ் செய்து விடுவான். கச்சேரி காலச்சேபம் இலக்கியவிழா நாடகம் என எங்கு போனாலும் ஜோடியாக சுற்றினோம்.
சீதாவுக்கு அவன்மேல ஒருகண் என ரொம்பவும் தாமத மாகத்தான் எனக்குத்தெரிந்தது. அதுகூட நானாகத் தெரிந்து கொள்ளவில்லை.
பெங்களுரிலிருந்து வந்த என் தங்கைதான் கண்டுபிடித்தாள்.
மணி என்னதான் நல்லவனானாலும் காதல் என்றாலே சீறும் சொந்தக்காரர்களுக்கு பயப்பட்டேன்.இதைத்துண்டிக்க நினைத்தேன் மணி ரொம்பவும் முன்னெச்சிரிக்கைகாரன் என்பதை அதில்தான் கண்டேன்.காலையில் நான் ஏதாவது சமாதானம் சொல்லி அவன் வரவைத் தூண்டிக்க எண்ணினேன்.
ஆனால் மாலையில் அவனே வந்தான்.
“அஙகிள் எனக்கு சென்னைக்கு டிரான்ஸ்பர் வந்துடுச்சு. நாளைக்கே அங்க போய் ஜாயின்பண்ணனும்.ராத்திரி சேரன்லே ரிசர்வ் பண்ணியாச்சு.உங்களோட ரொம்ப பழகிட்டேன். பிரியறதுக் குமனசு ரொம்ப கஷ்டப்படுது. என்றன்.

17
என்னுடைய கணகளிலும் ஜலம் பெருகியது.என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. அவன் போய்விட்டான்.
அவன் போன பிறகு எங்கெல்லாமோ வரன்கள் வருவதும் போவதுமாய் நாட்கள் கழிந்தன.ஒன்றுகூட குதிரவில்லை. ஒன்று ஜாதகம். இல்லையென்றால் சீர் செனத்தி. ரெண்டும் விட்டால் வரன் லடசணமாயில்லாதது. இப்படி ஒரு வருஷம் முடிந்தது. அந்த தீபாவளியை ஏதோசொரத்தில்லாமல்லாமல் கொண்டா டினோம். கொல்லையில் புடவை காயப்போட்டுக்கொணடிருந்தாள் சீதா.திடீரென்று எங்கிருந்தோ ஒரு ராக்கெட் வெடி அவள் முகத்தில் மோதி வெடித்தது.வெறும் காயம் எனறு ஏதோ ஆயின் மெணட் வாங்கிப் போட்டோம்.புண் சரியாகிப்போனது. ஆனால் அந்த இடம் மட்டும்கன்னம் முழுக்க மேரி பிஸ்கட் அளவுக்கு வௌ;ளைத் திட்டாக நின்றுபோனது
டாக்டரிடம் காட்டிய போது ஸ்கின் ஸ்பெஷலிஸ்டை கன்சல்ட் பண்ணச் சொன்னார். ஸ்பெஷலிஸ்ட்டிடம்தான் இநத நான்கு வருடமும் மாதம் தவறாது இரண்டாவது புதன்கிழமை போய் காட்டி வருகிறோம்.ஆயின்மெணட்டும் பில்சுமா எழுதிக் கொடுப் பார்.நான்கு வருட மருத்துவத்தில் லேசாய் குணம் தெரிந்த மாதிரி இருக்கிறது. வௌ;ளை வட்டத்தைச்சுற்றி லேசாய் பழுப்பு படர்கிறது.
“இது நல்ல அறிகுறி நாளடைவில் சரியாகிவிடும் என்று டாக்டர் சொன்னார். இப்படியானதிலிருந்து சொந்த பந்தம்முழுக்க இவளுக்கு இப்படியானதையே பேசினார்கள் எந்த வரனும் அமையவில்லை.
மனசு முழுக்க சோகத்தை தேக்கியபடி இதோ நாட்களை கடத்துகிறேன்.
“அப்பா டோக்கன் எட்டுன்னு கூப்பிடறாங்க நாமதானே?”
தூக்கத்திலிருந்துவிடுபட்டவனாய்
“ஆமாம்மா வா போகலாம்.”என்றேன்.
டாக்டரின் அறை பளிச்சென்று வௌ;ளையிலிருந்தது.



18
“உக்காருங்க சார். வாம்மா இப்படி சீதா தானே? இம்ப்ரு மெனட் என்னான்னு பார்ப்போம்.”
டாக்டர் பரிசோதனை செய்தார்.
“நல்லா இம்ப்ரூவ் ஆகியிருக்கு. இன்னொருஆயின்மென்ட் மாத்திப்பார்போம்.இன்னும்ரெண்டொருவாரத்திலே குணமாயிடும்.
வெளியே வந்தோம்.
மாலையில் மணியின் வரவை என்னால் தடுக்க முடியவில் லை.பழையபடி எங்கள் நட்பு துளிர்த்தது. இப்போது அவன் சீதாவை பார்ப்பது கூடயில்லை.
டாக்டர் சொன்னபடி ஒரே வாரத்தில் அது காணாமல் போனது. சீதா இப்போது பழைய முகத்தோடு மலர்ச்சியா யிருந் தாள். அநத வாரத்தில் ஒரு கல்யானம் வந்தது. குடும்பத்தோடு போனோம் முன்பு பெண் பார்த்து விட்டுப்போனவர்கள் சீதாவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். மறுபடி சம்பந்தம் பேச வருவதாகச் சொன்னார்கள்.
நான் சரியாக பதில் சொல்லவில்லை.
மறுநாள் மணியைப் பார்த்தேன்
“மணி ஒரு விஷயம் சீதா உன்னே விரும்புறா.இல்லையா?”
“ ஆமா சார்”
“உனக்கும் விருப்பம்தானே.?”
“ஆமா சார்” சலனமில்லாமல் சொன்னான்.
“ஆறுமாசத்துக்கு முன்னேயே நான் இந்த முடிவுக்கு வந்துட் டேன்.மணி ஆனா அப்போ நான் கல்யாணத்துக்குச் சம்மதிச் சிருந்தா மத்தவங்க என்ன நினைப்பாங்க? ஏதோ பொண்ணுக்கு வியாதி.கன்னம் கூட வௌ;ளையாயிருக்கு அதான் உன் தலையி லே கட்டிவச்சுட்டேன்னு பேசுவாங்க. இப்போ முழுசுமா குணமா யிடுச்சு அதான் உன்னைக் கேட்டேன்.” என்றேன்.
மணியின் கண்கள் பனித்திருந்தன்.
-00000-


19
4.எதையும் தாங்கும் இதயமிருந்தால்

“உள்ள ராசப்பனிருக்கானுங்களா?”
-வெளியே நூலகரிடம் யாரோ ஒரு பெண்குரல் கேட்பது தெளி வாய்கேட்டது. வெளியே ராசப்பன் வந்தான். வெய்யில்கண்ணைக் கரித்தது.பக்கத்து வீட்டுஅங்காத்தாள்.
“ சாமி ராசப்பா உன்ன எங்கெல்லாம் தொளாவறது போ. ஒரு மணிநேரமா சுத்து சுத்துன்னு சுத்தீட்டு வந்திருக்கம்போ.”
“அதுசரிக்கா மெட்ராஸிலிருந்து எப்ப வந்தே? என்னைஎதுக் குக்கா தேடணும்?”
இருபது வயதுவாலிபனா அவன்? தலையெல்லாம் எண்ணை காணாது பஞசாய் பறக்க, அழுக்குசட்டையில் ஒர்க்ஸாப் போரவனாட்டம் ஒல்லியாய் தெரிந்தான்.
“ உங்க பாட்டிக்கு வேளை வந்திடுச்சு போலிருக்கு ராசப்பா, ”
அவள் வார்த்தை சவுக்காய் விழ,
“ என்னக்கா சொல்றீங்க?” அதிர்ந்துபோய் கேட்டான்.
“ ஆமாப்பா துடுக்கு துடுக்குங்குது நொடிக்கொருதரம் ராசப்பா ராசப்பாங்கறா. உங்க அத்தைதான் அக்கா கொஞசம்போய் கூட்டிட்டு வாங்கன்னா. நானும்உன்னைய மாரியாத்தா கோயிலு, ஸ்ரீராம் கொட்டாயி,பஸ் ஸ்டேணடுஅஞ்சலிபேக்கரி, மஸ்தூர் சங்கம்னுதேடாதஇடமில்ல.அப்புறம்எதுக்காலவந்தவேல்முருகந்தா லைப்ரரிக்குப் போய்பாருன்னான். அதான்.வந்தேன்.”
“வேல வெட்டியில்லாத பயலுகளுக்கு இந்த இடந்தானே போக்கிடம்.அதுசரி மெடராஸிலிருந்து எப்ப வந்தீங்க மச்சானும் கூட வந்திருக்கா?”
“காலைலே நானும் மச்சானும்தான் வந்தோம். பாட்டிக்கு உடம்பு சரியில்லாம போய் நா பாக்கவேயில்லையே பாக்க லாம்னு வந்தேன்.நாம்பாத்த வேளையோ என்னவோ மூஞ்சியே கோணிப் போய் எல்லாத்தை ஒருமாதிரி பாக்கறாங்க ராசப்பா ராசப்பாங்கறது மட்டும்தா காதுலே கேட்குது. அதுசரி உங்க


20
பாட்டிக்கும்உனககும்தான் ஏழாம் பொருத்தமாச்சே. எப்பிடி இப்படி ஒரு கரிசனம் தீடீர்னு.”
அங்காத்தா சொந்த அக்காவாக இல்லாவிட்டாலும் அவன்மேல் ஒரு பாசம். அவள்கேட்பதில் ஒருநியாயமிருந்தது. அவள் ஊருக்குவந்தே ஐந்துவருடமிருக்கும். ராசப்பன் நினைத்துப் பார்த்தான் அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் எப்போதும் அவனை ஒரு எதிரியாகத்தான் பாட்டி பாவித்திருக்கிறாள்.
அவள் தாத்தாவும் அப்பாவும் ப்ளேக் வந்தபோது ஒரே சமயத்தில் இருவரும் போய் சேர்ந்துவிட்டார்கள். தாத்தா வௌ;ளைக் காரன் கம்பெனியில் வேலை பார்த்த தனால் வாரிசுக்கு மாமாவை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார்கள்
இதற்கு ராசப்பனோடு பிறந்தவர்கள் யாருமே இல்லை. புழுக்கை மாதிரி ஒட்டாத ஒண்டி ஆளாய்த்தான் பிறந்தான். அந்த பாவமோ என்ன்வோ பாட்டிக்கு அவன் மேல் வெறுப்போ வெறுப்பு.
ராசப்பனுக்கு ஐந்து வயதிருக்கும் பள்ளிகூடத்தில் எல்லோரும் ஒரே மாதிரி பொம்மைசட்டை போட்டுக்கொண்டு வருகிறார்கள் தனக்கும் அதுமாதரி வேணும் மாமா விடம் சொல்லி வாங்கிதர அவன் அம்மாவிடம்தான் கேட்டான்.
“நீ கெட்ட கேட்டுக்கு பொம்மைசட்டை ஒண்ணுதான் பாக்கி. சோத்துக்கே வழி யக்காணோம் உங்க மாமாஞ்சம்பாரிக்கறது அவனிருமலுக்கே பத்தாம கெடக்குது. போடா மாமா காதுல கான விழுந்துச்சு உன்னக் கொன்னே போடுவான்.
பாட்டி அதட்டினாள் சிறுகுழந்தைதானே ஆசை அவ்வளவு சீக்கிரம் விடுமா? அழு தான். அடம் பிடித்தான். அம்மா கூட சமாதானம் செய்தாள்.அப்போதுதான் வெறுப்பேற்படும் படியான முதல்நிகழ்ச்சி நடந்தது.
“அவன இப்படியெல்லாம் விட்டா சரிப்படாது.இஙகவுடு”
அவன் கையைப் பிடித்திழுத்து திண்ணைகாலில் வாழை மட்டையால் கட்டி வைத்து ரெண்டு கண்ணிலும் வெங்காயத்தை தட்டி பிழிந்து விட்டாள் பாட்டி.

21
அப்போது எப்படி துடித்தான் என்பது இருபது வருடம் கழிந்தும்கூட நினைவில் பசுமையாய் நின்றது.
இதுபோல ஏதேதோ காரணத்துக்காக ஒருதரம் சமையல் அறைக்குள படியில் நெருப்பைப் போட்டு ஒருகை மிளகாயைப் போட்டு கார நெடி மூக்கிலேற அந்த அறைக்குள் ராசப்பனைத் தள்ளி கதவை சாத்திவிட்டாள்.
சாதாரணமாக தாளிக்கும் போது ஏற்படும் காரநெடியே தாங்க முடிவதில்லை. மிளகாய் புகை அறை முழுக்கப் பரவி யிருக்கும் போது அந்த பிஞசு எப்படி அழுந்தி யிருக்கும்.
இன்னொருதரம் கூடையை கயிற்றில் கட்டி அவனை உட்கார வைத்து கிணற் றில் இறக்கி விட்டாள்.
அவனுக்கு அப்படியே குதித்துவிடலாமா என்றுகூட தோன்றியது. இருந்தாலும் அடிக்கடி அம்மா சொன்னது நினைவுக்கு வரும்“ஏண்டா எனக்கு நீ ஒரே பையன்.நீ பெரிய வனாயிசம்பாரிச்சு என்னைய காப்பாத்தணும்பா பெரிய உத்தி யோகத்திலே உக்காந்து உங்கப்பா பேர் எடுக்கணும்.”
-என்று சொல்லியதற்காக பாட்டி சொன்னதை யெல்லாம் கேட்டான். தன் ஆசைகளை யெல்லாம் காலில் போட்டு நசிக்கினான். மாமாவின் வருமானம் வறுமையிலிருந்து எழவே முடியாமல் போனது.
ஒருவழியாக மேல் வகுப்புகளுக்குப் போக ஆரம்பித் தான்.காலை ஐந்து மணி ஆனால்போதும்
“டேய் எந்திரிடா. எந்திரிச்சு படிடா” என அதட்டல் போடுவாள் பாட்டி.காலை நேரத்திலநல்லதூக்கம்வரும்.சவுடாலாய ரெண்டு நிமிடம் தாமதிப்பான். உடனே,
“இன்னும் எத்தனை காலம் உங்களுக்கு வடிச்சுக் கொட்டிட்டு உங்க மாமா னிருக்கணுமோ?” என்பாள்.
அவனுக்குக்கூட வேடிக்கையாயிருக்கும் மாமா என்ன கார ணத்திற்காகவோதிருமணத்தைத்தளளிப்போடஅதற்குகூட அவர்கள் தான் காரணம் என்பது எப்படி பொருத்தமாகும்.

22
நல்லவேளை எப்படியோ சீக்கிரம் ஒரு வசதி குறைந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ரெண்டு பையன் களுக்கும் அப்பாவாகிவிட்டார். அத்தை வந்தவேளை அவனுக்கு ஆதரவு கிடைத்தது. ஆனால் பாட்டிக்குத் திடீரென பக்கவாதம் வந்து கை கால்கள் விளங்காமல் போனது. படுத்த படுக்கையாகி விட்டாள்.பாட்டி எல்லாவற்றிற்கும் பிறர் உதவியை நாட வேண்டி யிருந்தது. புது மருமகள் செய்வாள் எப்படியோ ஏதாவது ஒரு நேரத்திற்குத்தான் கவனிக்க முடியும். அந்த வேளை பார்த்து அம்மாவிற்கு ஒரு விடுதியில் வேலை கிடைத்தது. வீட்டின் வறுமையை விட பாட்டியின் நோய் பெரிதாய் படாததால் அம்மா விடுதி வேலைக்குப் போய் சேர்ந்து அங்கேயே தஙகிவிட்டாள்.
பாட்டியைக் கவனிக்க அத்தையைத் தவிர யாருமில்லா மல் படாதபாடு பட்டாள்.
அவனுக்கு ஆரம்பத்தில் கொஞசம் சநதோசமாக இருந்தா லும் பின்னால் பாட்டி மருமகளிடம்படும் கொடுமைகளுக் காக இரக்கப்பட ஆரம்பித்தான்.
அவளைப் பார்த்தாலே பரிதாபமாக இருந்தது. அவன் பள்ளிப்படிப்பு முடிந்து வேலைக்காக முயற்சி செய்து கொண்டி ருந்தான் இந்த நேரத்தில் அவன் மாமாவும் திடீரென மாரடைப்பால் இறந்து போனார்.
துக்கம் விசாரிக்க வந்தவர்கள் எல்லாம் கிழவியைக்கரித் துக் கொட்டினார்கள்.
“இந்த கிழவி போயிருக்கக் கூடாதா?கையும் காலும் வராம கெட யிலேயே கெடந்துட்டு எத்தனை காலம் இருக்கப் போகுது.
அதை நினைத்து நினைத்து கிழவி மிகவும் குமைந்து போனாள். ஒரு வேளை சாப்பிட்டுக்கொண்டிருந்ததையும் நிறுத்தி விட்டாள். சுத்தமாய் ஆகார மென்பதே இல்லாமல் போனது.
மாமா இறந்தபின் அவர் வேலைசெய்த கம்பெனியிலேயே
வேலையில் சேரும் வாய்ப்பு ஒன்று வந்தது. அதற்கான முயற்சியில் அலைய வேண்டியிருந்தது.


23
நாளாக நாளாக கிழவி அசையக்கூட முடியாமல் படுத்துக் கிடப்பாள். கிடயிலேயே மூத்திரம் இருந்து நாறும். கட்டெ றும்புகள் கூட்டமாய் படையெடுத்து இருபுற மும் வரிசையாய் நின்று கடித்துப் பிடுங்கும் வலி பொறுக்கமுடியாமல்
“ஐய்யோ ஐய்யோ ” என்று கதறித்துடிப்பாள். புருசனை இழந்த துக்கத்தில் கிழவியை அறவே வெறுப்பதனால் அத்தைகாரி கவனிப்பதையே நிறுத்திக்கொண்டாள்.
இப்போது கிழவியை கவனிப்பது ராசப்பன் மட்டுந்தான்சாப் பிடு வதையே கிழவி நிறுத்தி ஒரு பத்துநாட்களுக்குப் பின் சாப்பி டமுடியாமல் போனது. “பசிக்கிறது” என்பாள்.சாப்பிட என்ன கொடுத்தாலும் வாயில்போட்டவுடன் குமடடி வாந்தி எடுப்பாள்.
அவளுக்கு ஆதரவாய் சில சமயங்களில் பேசிக் கொண்டி ருப்பான். ராத்திரி கூட அவன் வேலை விசயமாய்பேசிக்கொண்டி ருந்தான்.
“பாட்டி மாமாகம்பெனியிலேயே வேலை கெடச்சிருக்கு செக் யுரிட்டிபோஸ்ட் பணங் கட்டணும் ஐயாயிரம் தேவைப்படுது. எங்கியாச்சும் கடன்வாங்கித்தான் கட்டணும். யார் கிட்ட கேக் கிறதுன்னு தெரியல்ல.“
அவளிடம் சொல்லி என்னபிரயோசனம் சாகப்போகிறவள் என்னவோ ஒரு ஆதங்கத் திற்கு அப்படி பேசினான்.ஆனால் அது வே கடைசி பேச்சாக இருக்கும் என்று அவன் நினைக்கவில்லை.
வீடு வந்துவிட்டது. கிழவி திண்ணையில் நாராய் கிடந்தாள். யாரும் பக்கத் திலில்லை. அத்தை வீட்டு வேலை களை கவனித்துக்கொண்டிருந்தாள். பையன்களுக்கு சாப்பாடு அனுப்பணும் அங்காத்தா கூட,
“தோ வந்துட்டேன் நீ போய் கிழவியப் பாரு என்ன சொல்லு துன்னு?”
அவள் கழண்டு கொண்டாள்.
கிழவி துடித்துக்கொண்டிருந்தாள் அடிக்கொருதரம் விக்கல் எடுத்தது.பேச நாவர வில்லை.ராசப்பனை கண்டதும் முகத்தில் முகத்தில் மலர்ச்சி பிறந்தது.

24
அருகில் வரும்படி சைகை காட்டினாள்.
“என்ன பாட்டி என்ன செய்யுது டாக்டரக் கூட்டிட்டு வரட்டுமா?”
அவள்சிரமப்பட்டு வாயைத்திறக்க முயற்சி செய்து,
“தலகானிலே தாலி” என்றாள்
தலகாணிக்குள் கையை விட்டுப்பார்த்தான்.
ஒருசின்ன சுருக்குப்பை. அதனுள் அவளுடைய தங்கத்தாலி.அவன் கண்களில் நீர் வழிந்தது“வச்சுக்கோ“ என்றாள் தண்ணீர் தருமாறு சைகை செய்தாள்.தண்ணீர் தந்தான். ஒருமிடறுஉள்ளே போயிற்று உயிரும் பிரிந்தது. அவளுடைய தாலியை பையில் பத்திரப் படுத்திக் கொண்டாள்
இவளா கொடுமைக்காரி. இவள் அதட்டி அப்படி தன்னை முறைப் படுத்தியிருக்காவிட்டால் இப்படி ஒரு முழுமையான ஒழுங்கான ஆளாய் ஆகியிருக்க முடியாது என்பதை உணர்ந் தான்;எந்தப்பாடடி கொடுமைக்காரிஎன நினைத்தானோ அவள் தான் தன் எதிர்கால வெளிச்சத்திற்கு ஒளிதந்திருக்கிறாள். -00000-





















25
5.மறுபடியும் ரகு
; மாலைநேரம்-.ஆரஞ்சுவண்ணச் சூரியன் மேறகுமலைச் சாரலில் ஒளியத் துவங்கினான். மாரியம்மன் கோவில் கலகலத்தது. கலர் பார்க்கும் விடலையர்களைத் தவிர்த்து சீனு தனியாக நின்று அம்மனைக் கும்பிட்டான் கூடவே ரகுவையும் நினைத்துக் கொண்டான் இம்மாதிரி வேலைகளுக்கு ரகுதான் லாயக்கு. அவனை எங்கே பார்ப்பது நாளொரு திருட்டும் பொழுதொரு ஜெயிலுமாய் அலைகிறவன் அர்ச்சகர் கொடுத்த திருநீற்றை நெற்றியில் இட்டுகொண்டு வெளியே வந்தான்.சீனு. தூரத்தில் ஆட்டோ ஸ்டாணட் ஓரமாய் சீனுவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. ரகுதான் நின்றிருந்தான்.
“டேய்ரகு! ” உரக்கக்கூப்பிட்டான்.சட்டென முடியை சிலுப்பிக்கொண்டு திரும்பினான் ரகு. “டேய் சீனு நீயா! என்னப்பா என்ன அக்கரையா கூப்பிடற ஏதாச்சும் கல்யாணம் கான ஏதாச்சுமா?”
“அடநீஒண்ணுஅதுஒண்ணுதான்குறைச்சல்.” “உனக்கென்னப்பா.வேலைக்குப்போறே.மாசமானா சம்பளம்.”
“இங்க பார் ரகு. இநதக் காலத்திலே சம்பளம். உத்யோகம் இதெல்லாம் ஒண்ணும் நடக் காது எம்முதலாளியைப் பாரு. ஒவ் வொரு நாளும் லட்சக்கணக்காதான் வியாபாரம் பண்றான். பாங்கு க்கு போறதுக்கும்வர்றதுக்கும்தான் என்னை நம்பறான் அனாவசியமாய் சம்பளத்தைதவிரபைசா கழுவின தண்ணியக்கூட காட்டமாட்டேங்றான்அதனாலே ஒருபிளான் பண்ணியிருக்கேன். நீ தான் உதவி பண்ணனும்.”
“பிளானப்பத்தி அப்புறம் பேசுவோம் மொதல்ல அய்யர் கடை இடலியைபத்தி கொஞ்சம் பேசணுமாம். போலாமா?”.
“ம்” கிருஷ்ணா கபே காற்று வாங்கியது.
உண்மையிலேயே கிளீனர் பையன் ஈக்களை விரட்ட படாத பாடு பட்டுக் கொண்டி ருந்தான். இருவரும் உட்கார்ந்தார்கள். கிருஷணய்யர் கேட்காமலே சுடச்சுட இட்லியை இலையில்

26
வைத்தார். ரகு “ஐயரே தொண்ட ஒருமாதிரியிருக்கு கொஞ்சம் வௌ;ளி கொண்டா.” என விரட்டினான்
“இப்ப சொல்லு”
“ நாளைக்குக் காலையிலே ஒரு பார்ட்டிக்குக்கொடுக்கறதுக்காக பாங்கியிலே நாலு லட்சம் எடுத்துட்டுவரப் போறோம்.நானும் டிரைவர் மட்டும் தான் கார்லே போறோம். சாயிபாபாகாலனி “கோவைபாங்கிலே“ பணத்தை எடுத்துட்டு தடாகம் ரோடு வழியா வரு வோம். ஜி.சி.டி தாண்டினதும் ஈ காக்கா கூட அந்தநேரத்திலே இருக்காது. திக்பாரஸ்ட். ரெண்டு பக்கமும் கருவேலமரங்கள்தான் நிக்கும். ஆனைகட்டி போற பஸ்களும் பன் னென்டு மணிக்குத் தான் லாரிக எப்பவாச்சும் வரும்.அங்க ஒருசின்ன பால மிருக்கும். அந்த பாலத்துக்குப் பின்னாடி நீ நிக்கணும். காரை நிறுத்திட்டு இறங்குவோம்.“ “எதுக்கு”
“ ஒண்ணுமில்லே. ஒண்ணுக்குப் போகத்தான். அங்கதான் போறது வழக்கம்.”
“ ஓகோ!”
“நாங்க ரெண்டுபேரும் இறங்கி ஜிப்பை திறக்கறதுக்குள்ளே பின்பக்கமாக சட்டுன்னு பெட்டிய எடுத்துட்டு ஏதாவது கட்டையா லே முதல்லே லேசா என் மண்டையப் பாத்து அடி. நா கீழே விழுந்துடுவேன். முடிஞ்சா அவனையும் ரெண்டுசாத்து சாத்து. அவனும் கீழே விழுந்துடுவான்.டைம் பார்த்துட்டு பாங்க்குக்கு போ ன் பண்ணுவாரு பணத்தை எடுத்தாச்சுன்னா கண்டிப்பா காரெடுத் துட்டு தேடிட்டுவருவாரு. ஆஸ்பத்திரிலே.சேர்ப்பாரு. போலிஸ்லே கம்ப்ளைண்ட் கொடுப்பாரு. நீ பெட்டிய நம்ம ரூம்லே வச்சுட்டு தைரியமா உலா வரலாம் ரெண்டுநாள் கழிச்சு, டிஸ்சார்ஜ் ஆயிடு வேன். போலிஸ் விசாரணையில் என்னைய விட டிரைவர் தெளி வா சொல்வான்.நா கவலைப் படாம வீடு வந்து சேர்ந்துடறேன். நைட்டோட நைட்டா மங்களுர் எக்ஸ்பிரஸ்லே வடக்கே எங்கியாவது கிராமத்தில செட்டிலாயிடலாம்.” தன் திட்டத்தை விஸ்தாரமாய் விளக்கினான் சீனு.



27
“நீ என்ன சொன்னாலும் சரி எனக்கென்னவோ இது வொர்க்அவுட் ஆகிறமாதிரி தெரியல.” “ நோ நோ கண்டிப்பா சக்ஸஸ் ஆகும். நாளைக்குக் காலையிலே நீ தயாரா இரு.” சீனு புறப்பட்டான்.
மறுநாள் திட்டப்படி எல்லாமே சரியாக நடந்தது. ஆனாலும் எல்லோரும் அவசரக்காரர்களாய் போய்விட்டதால் கொஞசம் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே நடந்துவிட்டது. திட்டப்படி சீனுவும் டிரைவரும் பணம் நாலு லட்சத்தை பெட்டியில் சுமந்து கொண்டு பதட்டப்படாமல் தடாகம்ரோடு சின்னப் பாலத்தினருகே காரை நிறுத்திவிட்டு இறங்கி முள்வேலி ஓரமாய் ஒதுங்கிய அதே வேளையில் ரகு நல்லஇரும்புத்தடியால் மண்டையைப் பார்த்து நெஜமாகவே இருவரையும் செமத்தியாய் தாக்கினான்.நிஜமாகவே இருவரும் மயங்கி விழுந்தனர். இருவரின் மண்டையிலிருந்தும் ரத்தம் லேசாய் எட்டிப்பார்த்தது. இப்போ ரகு உஷாரானான். அவனுடைய திட்டப்படி இன்னும் இரண்டு மைலில் வரும் இடையர்பாளையத்தில் பஸ் ஏறி ஆனைகட்டி வழியாய் கேரளா சென்று கேரளாவாசி ஆகிவிடுவது என்பது அவன் திட்டம். பெட்டியை தூக்கிக்கொண்டு கண்மண் தெரியாமல் ஓடீனான். அவனுடைய துரதிர்ஷ்டம் அழகேசன் சாலையிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரி டிரைவர் குடிபோதையில் இவனையே குறிபார்த்து சரியாய் மோதி மரத்தோடு சாய்த்துவிட்டு பயத்தில் இறங்கி வந்த வழியே ஓடிவிட்டான். லாரி இடையில் சிக்கிய ரகுவும் பணப்பெட்டியும் ஒரு சேர வாயைப் பிளந்தனர். பெட்டியில் அடுக்கப்பட்டிருந்த நான்கு லட்சங்களும் கோவை நகர காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் அரசின் வனத்துறை கருவேலமரங்களில் போய் உட்காரத் துவங்கின.
-00000 





28

6.ராத்திரிக்கு?..

நான்கு நாட்களாய் விடாது பெய்த மழையில் ஊரே தண்ணிரில் மிதந்தது. சாய்ங்காலம் லேசாய் ஒரு வெட்டாப்பு விட்டபோதுதான் அந்த சேதி கிடைத்தது.
“என்ன செல்லா எண்ணையூத்தரானாக்கும்?” என்று யாரோ கூவியது யார் என்றுகூட நிமிர்ந்து பார்க்காத செல்லாவும் அவள் மகள் சின்னியும் ஆளுக்கு இரண்டு மண்ணெண் ணை டின்களை எடுத்துக் கொண்டு ஓடியபடியே
“ஆமாமுங்கோய் எண்ணதா ஊத்தறானா. இநத ஊத்தாத மழையிலே இவனுக்கென்ன கொள்ளையோ?” பதில் சொன்னாள் செல்லா
நல்லவேளை குட்டைமேட்டில் நின்ற ரேசன் கடையில் கூட்டம் குறைவாக இருந்தது.
“தேய், சட்டுன்னு டின்னுகளை லைன்லே வை. தோ நா பில்லு போட்டு வந்தர்றேன்.”
செல்லா மகளை லைனில் நிறுத்திவிட்டு பின்புறமாய் போய், அரிசியளக்கும் ரங்கப்பனிடம்,
“ரங்கண்ணோய்” என்று கெஞ்சும் பாவனையில் முகத்தை வைத்துக்கொண்டு கார;டுகளையும் பணத்தையும் நீட்டினாள்.
ரங்கப்பன் அவளை ஒரு பரிதாபத்தோடு பார;த்தான். கிள்ளிவிடக் கூட சதையில்லாத மெல்லிய வரண்டதோலும் எலும்புமாய்,கண்களை மட்டும் பெரிதாக வைத்துக்கொண்டு நின்றவளின் தலைக்கு எண்ணையே அவசியமில்லை. என்பது போல் பஞ்சுவௌ;ளையாய் நரைத்திருந்தது.
பார்க்க பாவமாய் இருந்தாலும் ரங்கப்பன் தன் பிகுவை விடாமல்,
“உனக்கு வேற வேலையே இல்லே? ஏதோ தலைவர்ஊட்லே குடியிருக்கறயேன்னு பாத்தா இதே பொழப்பா அலையறயே”
“போகட்டும்ராஜா. ஊட்லே சோறக்கி ரெண்டுநாளாச்சு ஏதோ இதையக் கொண்டுபோய் கொடுத்தா கெடைக்கற அஞசு ரூபாயில

29

அரை வயிராவது சாப்பிடலாம் எனக்கில்லேனாலும் புள்ளைக மயங்கறதுக் கொசற மாச்சும் கொஞ்ம்…”
ரங்கப்பனால் அதுக்கு மேலும் ஒன்றும் பேசமுடியவில்லை.
“செரி செரி இப்பவே ஒண்ணும் முடியாது. அரைமணி நேரம் கழிச்சு வா பாக்கலாம்போ.”
செல்லாளுக்கு உயிர் கைக்குள் வந்த மாதிரி “மகராசந் தலை நாள்லே ஆம்பிளப்புள்ளயாவே பெத்துக்க சாமி” என்று வார;த்தைகளை சிந்தி விட்டுமகள் நின்றவரிசைகச்கு வந்தபோது கூட்டம்இன்னும் சேர்ந்திருந்தது சட் டென கவனம் வந்தது போல
“சின்னி இஞசினியருட்லே ஒண்ணும் கொடுக்கலையா புள்ள?”
தாயின் கேள்வி காதில் விழுந்ததும் தீயைமிதித் வள்போல் ஐய்யோஇரும்மா தா இன்னொருவாட்டி இஞ்சினியாவீட்டுக்கு போணும்.”
“எதுக்கடி?”
“பழைய சோறு கொஞ்சம் மிச்சமிருக்குன்னு ஒரு போசிலே போட்டுகொடுத்தாங்க அதநா அங்கயே வச்சுபோட்டு வந்துட்டேன் அந்த பாழாப் போன நாய்கான தின்னுடுமோ என்னவோ?”
பயந்து ஓடினாள் மழையில் நனைந்து களிமண் நிலம் வசக் வசக் என்று காலைப் பிடித்தது.
பாத்துப்போடி எங்கியாவது உளுந்துகான தொலைக்காதே காலையிலே வேலைக்கு போகமுடியாது. சம்பாதிக்கறலடசணம் மாத்துதுணிக்கு கூட வழியில்லை. என்று உரக்கக் கூவியவள் அக்கம்பக்கம் தன்னையாராவது பார்க்கிறார்களா என்றுஓரு முறை பார்த்துக் கொண்டாள்.அதற்குள் எண்ணை வாங்க பணம் கொடுதத காலனிக்காரி சீதாவும் தோட் டத்து பொன்னியும்
“என்ன செல்லா எண்ணெ கிடைக்குமா?”
“வாங்கீர்லாம்மா.”
“பில் போட்டாச்சா?” என்று தங்கள் பணத்துக்கு பாதுகாப்பு தேடினார்கள்.



30
“ ம் பணம் கொடுத்துட்டேன இப்ப ரங்கப்பன் கொண்டாந்து தந்துருவான்.” அவள் சொல்லிக் கெண்டிருந்தபோதே நடையின் பின்பக்கம் நின்ற ரங்கப்பன்
“இந்தா செல்லம்மா” அதட்டலுடன் கூவினான்..
“ தோ வந்துட்டேன்” என்றவள் அவர்களைப் பார்த்து
“பில்போட்டாச்சும்மா. பத்துநிமிஷத்திலே எண்ணைவாங்கிடலாம்”
எனறபடியே ரஙகப்பனைப் பார்க்கப்போனாள்.
பில்லையும் மிச்சபணத்தையும் வாங்கிக் கொண்டு வந்தபோது சின்னி தன் வற்றல்உடம்பில் பெரிதாய் தெரிந்த பற்களை மட்டும் காட்டியபடி கெசுவாங்க’புஸ்புஸ்’ என்று மூச்சைவிட்டு
“நல்லவேளைம்மா அந்தபாட்டி எடுத்து உள்ளே வச்சிருந்தாங்க இல்லேன்னா இந்நேரம் நாய்தான் சாப்பிட்டிருக்கும்.”
“செரிசெரி என்ன பழையசோறுமட்டும்தானா ஊத்திக்க என்ன தாழ்ந்த குரலில் கேட்டாள்
“ஊத்திக்கெல்லாம் ஒண்ணும் கொடுக்கல்ல” சாப்பாடு சேத மில்லாமல் போன சந்தோசத்தில் கொஞசம் சிணுங்கியபடி சொன்னாள்.
“நீஇங்கே நில்லு நா வீட்டுக்குப்போய் தம்பிக்கு கொஞ்சம் போட்டுட்டு அடம் புடிக்காம தண்ணியெடுத்து அடுப்பப்பத்தவச்சு உலையவை. அதுக்குள்ள எண்ணயக் கொடுத்துட்டு அரிசிய வாங்கிட்டு வந்தர;றேன். இல்லேன்னா எல்லோரும் இன்னிக்கு பட்னிதான் கெடக்கணும்.”
தன் சாப்பாட்டு ஆற்றாமையை மகள் கையிலிருந்த போசியை வாங்கிக் கொண்டு போனாள்.
தூரத்தில் வீட்டுக்கு பக்கம் போகும்போதே கூட்டமாய் நாலைந்து பேர்சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர் வேரென்ன எவனாவது தண்ணியப் போட்டுட்டு ரகளை பண்ணுவானுக.. வேடிக்கை பாக்கறதுக்கு சொல்லவா வேணும். மனதில் வைத்தவளாய் நிமிர்ந்து பார்க்காமல் விடுவிடு வென்று வீட்டுக்குள் நுழைந்தாள். சாப்பாட்டுப் போசியை அடுப்புத் திண்ணைமேல் வைத்துவிட்டு



31
“இவனெங்க போனா“ அடேய் மருது என்று சத்தம் போட்டு குரல் கொடுத்தாள்.
“அங்கென்னடாபண்ணீட்டிருக்கே?’
“சத்தமேம்மா போடறே நம்ம ஊட்டுக்கார தாத்தா செத்து போயிட்டாரம்மா” செல்லாளுக்கு பகீரென்றது.
“நீ என்னடா சொல்றே”என்று அவள் கேட்டதற்குக்கூட பதில்தராமல்
“ என்னம்மாது போசியிலே சோறா?”. போசியை திறந்து சோற்றை அள்ள முயன்றான்.
அவன்பதில் சொல்லாமல் போனாலும் ஊர் பெண்களின் ஒப்பாரி ஓலம்.அந்த பகுதியையே நிறைத்தது.
சோற்றை அள்ளப் போனவனின் கையைப் பிடித்து இழுத்து வந்தாள். வேண்டான்டா எழஊட்லே சாப்பிடக்கூடாது. உனக்கு என்னமாச்சும் வாங்கிதர்றேன் .வாப்பா.”
“எனக்கென்னும் வேண்டாம் சோறுதான் வேணும் மூணுநாளா இப்படித்தா சொல்லிட்டிருக்கே நா சாப்பிட்டுதாவருவம்போ.” அழுதபடி அவள் பிடியிலிருந்து திமிறினான் உள்ளேஓடிய வேகத்தில் கால்இடறிபோசியி லிருந்த சோறு முச்சூடும் கீழே சிந்தி மண்ணுக்கிரையானது
“வாடா பேசாம” இழுத்துக்கொண்டு தெருவில் இறங்கினாள்
-00000-















32

7.பழைய வாத்தியார்

“என்னாங்க. உங்க பழையவாத்தியாராம். ஹால்லே உட்காரவசி க்கேன் அவரோட பையனுக்கு இங்க கிண்டிலே வேலை கிடைச் ருக்காம். உங்களப்பாத்துட்டு போலாமேன்னு வந்தேங்கிறார். சும் வா பாக்க வந்திருப்பார். ஆயிரத்தே கொடு, ரெண்டா யிரத்தக் கொ ன்னு பணங்கேக்கத்தான் வந்திருப்பார்ன்னு நெனைக்கிறேன் கொ சம் உஷாரா இருங்க. ஏமாந்து ஈன்னு பல்லக்காட்டிட்டு பணத் தூக்கி கொடுத்திராதிங்க. பாத்து நடந்துக்கங்க.”
“சரிசரி நீ காப்பிக்கான ஏற்பாடு செய் போ.”
ஹாலுக்குள் நுழைந்த போது பழைய அழுக்கு சட்டையுடன் உட்கார்ந்திருந்தார் வாத்தியார் பழனி.சங்கரைக் கண்டதும் எழுந்து நின்று வணக்கம் கூறினார்.
“சார் நீங்க உட்காருங்க.எவ்வளவு பெரியவங்க.என்னைப்பாத்து நிக்க லாமா.”
“அதில்லப்பா.” என்று தயங்கினார்.
“எப்ப சென்னை வந்தீங்க?”
“சென்னைக்குவந்துநாலுநாள்ஆச்சு.பாபுவுக்கவேலைகிடைச்சிக்கு. அவன் சென்னைக்கு வந்ததேயில்லை. யாரையும் தெரியாது. நாலுநாள் இருந்துஎல்லாம் சொல்லிக்கொடுத்துட்டுபோயிர்லம்னு இருந்தேன் அப்படியே உன்னையும் பாத்துட்டு போலாம்னு வந் தேன்.”
“ரொம்ப நன்றி சார் டிபன்சாப்பிடலாமே.”
“பரவாயில்லேப்பா. எனக்கு ஒரு உதவி கேட்க தயக்மாயிருக்கு.” “சும்மா சொல்லுங்க.”
“பையனுக்கு ஹாஸ்டல்லே இடங்கிடச்சிருக்கு ஐயாயிரருபா டெபாசிட் கட்டணுமாம். நீதான் உதவிபண்ணணும் ஊருக்குப் போனவுடனே பணம் அனுப்பி வச்சிட றேன்.” அப்போது சங்கரின் மனைவி காப்பியை கொண்டுவந்து டீபாயில் “ணங்”கென்று


33
வைத்துவிட்டு,
“ஏன் சார் எங்களுக்கென்ன பணம் கொட்டியா கெடக்கு வர்ரவங் களுக்கெல்லாம் தூக்கிக் கொடுக்க. நீங்க வேறே எங்கயாவது டிரை பண்ணுங்க.”
-முகத்திறைந்த மாதிரி சொன்னாள். வாத்தியார் ஆடிப்போய் விட்டார். ஓன்றும் பேசாமல் எழுந்து கொண்டார். வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சங்கர் வீட்டிற்குள் நுழைந்தான் .உடையை மாற்றிக் கொண்டு ஆபிஸூக்குக் கிளம்பத் தயாரானான். டேபிள் மேல் பழைய டிக்ஸ்னாp புத்தகம் இருந்தது.
“ ச்சே அந்தகாலத்திலே இந்த வாத்தியார்தான் இந்த புத்தகத்தைக் கொடுத் தார். திருப்பி கொடுத்திருக்கலாம்.”
சங்கர் பஸ் ஸ்டாப்பருகே சென்றபோது இன்னமும் வாத்தியார் நின்று கொண் டிருந்தார். பஸ்ஸூம் வரவில்லை.
“சார் எம்பொண்டாட்டி ஒருமாதிரி. தயவுசெஞ்சு நீங்க என்னை மன்னிக்கணும். நீங்க கொடுத்த புஸ்தகம். எனக்கு ஆபிஸூக்கு டைமாச்சு நான் வர்றேன்.”என்றுகிளம்பி னான.; கையில் வாங்கிய புத்தகத்தை பிரித்தபோது அதில் ஐநது ஆயிரரூபாய் தாள்கள் இருந்தன.வேறுவழியிலலை. ரோசப்பட முடியாது. ஊருக்குப் போனவுடன அனுப்பிவிடலாம்.
-00000-
















34
8.காகிதக் கால்கள்
அபாண்டமாய் சுரேஷ் மேல் அந்த பழி வந்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. இந்தக்கழுதையா அப்படிச் செய்தது. முணுக்முணுக் கென்றிருந்து விட்டு இந்த வேலை செய்திருக் கிறானே?
ஸ்கூல்விட்டு வீட்டுக்கு போனதும் படுவாவை உண்டுஇல்லை என்று பண்ணிவிட வேண்டியதுதான்
ஒழுங்கான படிப்பு கிடையாது. வாத்தியார்பிள்ளை மக்கு என்பது சயாய்தான் ஆகிவிட்டது. சுரேஷ் என் மகன் என்பதற்காக என்ன செய்ய முடியும் படிடா என்று கண்டிக்கலாம். படிக்கிறமாதிரி பாவ்லா பண்ணுவதற்கு என்ன செய்ய முடியும்? அவன் அதிர்ஷ்டமோ என் நேரமோபிளஸ் டூவை தாண்டவைத்தாயிற்று.
வேலை வெட்டி யில்லாத தண்டபசங்களோடு சுற்றி கெட்டுப் போய் விடக்கூடாது என்று கவலைப் பட்டு சுப்பையா ஸ்டோரில் சேர்த்து விட்டேன். சுப்பையாவும் “பரவாயில்லை. சார் பையன் சுறுசுறுப்பா வேலை செய்யறான். வர்ற கஷ்டமர் கூட ரொமப அப்ரிசேட் பண்றாங்க சார்.’
என்று சர்டிபிகேட்கொடுத்தபோது ஏதோ இல்லாத குறை எப்படி எல்லாமோ வரக்கனவு கண்டு இப்போதைக்கு இதுவே இருக்கட் டும் என்ற நினைத்த மறுநாளே குண்டைதூக்கிப் போட்டாற் போல இப்படி ஒரு காரியம் பண்ணிட்டு நிக்கறானே
காலையில் ஸ்கூலுக்கு லேட்டாய் போயிடுச்சேன்னு அவசர அவசரமா சைக்கிள் மிதிக்கிறேன். சுப்பையா பரபரப்பாய் ஓடி வந்து,
“வாத்தியார் சார் இப்படி கொஞசம் வந்துட்டுப்போங்களேன்.”
-கூப்பிட்டார் இதென்ன தொந்தரவு வயசான காலத்திலே அனாவசியமாய் ஒரு பேச்சு வாங்கக்கூடாது என்று நினைத்து நேரத்தோடு புறப்பட்டவனுக்கு இப்படி ஒரு சோதனை.கடையை நெருங்கியபோதுசுரேஷைகுற்றவாளிபோலநிற்கவைத்து நாலைந்து பேர் விசாரித்துக் கொணடிருந்தனர்.

35
“வாங்க வாத்தியார் சார் உங்க பையன் பண்ணியிருக்கிற வேலையைப் பாத்திங்களா? மீசை கூட சரியா முளைக்கலே இப்பவே இவனுக்குப் பொண்டாடடி வேணுமாமா. ஏம்பொண் ணுக்கு காதல் கடிதாசி கொடுக்கறான் யா அதுவும் எப்ப? எங்க வீட்டுக்கு நாலு பேர் பொண்ணு பாக்க வந்திருக் காங்க கொஞசங் கூட பயமில்லாம லவ் லெட்டர் கொடுத்தனுப்பறான் சார் நியாயமான்னு நீங்களே விசாரிங்க,”
எதிர் வீட்டு குப்புசாமி குதித்தார். மனசுக்குள் பதட்டமா யிருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல்
“உங்கள பாதிக்கிற அளவு நிச்சயம் விடமாட்டேன். டேய் சுரேஷ் நீ வீட்டுக்குப் போடா” என்றேன்.
“அப்பா எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா நா எந்த லெட்டரும் எழுதலப்பா.”
சுரேஷ் கண் கலங்கியபடி சொன்னான் அதில் சற்று சலனம் கொள்ளச் செய்தது
“என்னய்யா பெரியமனுசன்னு விசாரிக்கச் சொ;ன்னா நீஎன்னவோ தப்பிக்க பாக்கறீயே”
குப்புசாமியின் வார்த்தைகள் தடிக்கவும் சுப்பையா குறிக்கிட்டு
“மரியாதையா பேசு”கையை ஆட்டினார்அவரை அமைதி படுத்த
“ஆத்திரப்படாதிங்க. இப்ப என்ன நடந்தது எம் பையன் லெட் டர் எழுதி உங்க பொண்ணுகிட்ட கொடுத்தானா?”
“ஆமாய்யா அதனாலபொண்ணுபாக்க வந்தவங்க எந்திரிச்சு போயிட்டாங்க.இதுக்கு ஒரு பதில் சொல்லியே ஆகணும்.”
“எங்க அந்த லெட்டரக்கொடுங்க” லெட்டரை கையில் கொடுத்தார்.
“லெட்டரைத் தவிர வேறு ஒண்ணும் தப்பு தண்டா நடக்கலை யே?”
“இலலை”
“இவன்தான் எழுதினான்னு எப்படி உறுதியாச் சொல்றீங்க?”
“இதென்ன இந்த குழந்தையைக் கேளுங்க”
“ஏம்மா யார் கொடுத்தாங்க இந்த லெட்டர; இவனா?”
சுரேஷைக் காட்டி கேட்டேன்.
36
“இல்லை”
“ஏய் பொய் சொல்றயா.நீதான எதிருகடைல நிக்கற மாமா தான் கொடுத்தார்னே இப்ப இல்லேங்கறே.”
குழந்தை மலங்க மலங்க விழித்துவிட்டு ,
“ஆமா இந்த மாமாதான் கொடுத்தார்.”
“ போதுமா”
“ சரி நா விசாரிக்கறேன்.பையன் இனிமே உங்க வீட்டு விசயத் தில தலையிட மாட்டான.; நா கியாரண்டி.” என்றேன்.
“சார் நீங்க புறப்படுங்க” என்றார் சுப்பையா.
நானும் புறப்பட்டு வந்து விட்டேன். முதல் பீரியட் லிஸர்தான் இரண்டாவது பீரியட் அக்கௌண்டன்ஸி நோட்ஸ் கொடுக்கணும் பீரோவிலிருந்த பழைய நோட்சை எடுத்துக்கொண்டு டேபிள் முன் அமர்ந்து ஒருபார்வை விட்டேன். சட்டென அதிர்ந்து போனேன்.
அந்தக் கடிதத்தையும் எடுத்துப்பார்த்தேன் சந்தேகமே இல்லை. இந்த நோட்டு யாருடையது என்று பார்த்தேன்.
சுப்பையாவுடையது. பத்து வருசத்துக்கு முந்தியது. சுப்பையா என்னுடைய மாணவன்தான். எழுத்து முத்து முத்தாயிருக்கும். அவனை மாதிரி எழுதணும் என்று கண்டித்து கண்டித்து சுரேஷின் எழுத்தும் கிட்டத் தட்ட இது போலவே இருக்கும்
ஆனால் ஓரு வித்தியாசம் சுப்பையாவுக்கு’கே’ வுக்கும் ‘கோ’வுக் கும் வித்தியாசம் தெரியாது எங்கே கால் போடவேண்டும் என்பது சந்தேகம்.
சந்தேகமே இல்லை சுப்பையாவுடையதுதான்.’அனபே’என்று துவங்கிய கடிதத்தில் ‘அன்போ’ எனத் துவங்கியிருப்பதே சாட்சி..
மத்தியானம் சாப்பாட்டைக் கூட கவனிக்காமல் சுப்பையாவின் கடைக்குப் போனேன்.
“என்ன சுப்பையா கடிதாசி நீதானே எழுதினே?”
என நேரடியாகவே கேட்டேன்
“சார் என்னை மன்னிச்சுடுங்க. குப்புசாமி எனக்கு முறைமாமன் அநதப் பொண்ணும் நானும்மனப்புர்வமா விரும்பறோம். மாமா உத்யோகத்திற்கு போகிற மாப்பிள்ளைக்குத்தான் கட்டிக்
37
கொடுப்பேன் என்றார். அதனாலதான் இப்படி செஞ்சேன். ஆனா தெரியாத்தனமா பழி சுரேஷ் மேல விழுந்துடுச்சு.அந்த நேரத்தி தைரியமா நான்தான் எழுதி னேன் சொல்ல மனசு வர்லே.”
நான் வந்ததைப் பார்த்ததும் வந்த குப்புசாமி எல்லாமே கேட்டி ருக்கவேண்டும்.
“வாத்தியார் சார் என்னையும் மன்னிச்சுடுங்க மாப்பிள்ளைய பத்தி முன்னாடியே விஷயம் கேள்விப்பட்டேன் ஆனா முறைப்படி கேட்காம எப்படி பொண்ணக் கொடுக்க முடியும். அதுக்காக எத்தனை நாளைக்கு பொண்ணை வச்சிட்டிருக்கமுடியும்.”
என்று குப்புசாமி சமாதானமானார். எனக்குள் சிரிப்பு எழுந்தது சுப்பையாவைப் பார்த்து
“ என்னப்பா காதலுக்கு கண் இருக்குதோ இல்லையோ உன் னோட இந்தக் காதலுக்கு ஒருகால் அதிகமா இருக்குப்பா.”
என்றதும் சிரிப்பலைகள் கடையைக் கடந்தது. சுப்பையாவுக்கு வெட்கம் அதிகமானது.
-00000-























38
9.திடீர் மருமகள்!!!

திங்கட்கிழமை காலைச்சூரியன் கிளம்பி உஷ்ணத்தைக் கூட்டியது.
துடியலூர் சந்தை நாள். ஆடு,மாடு வியாபாரம் செமத்தி யாய் நடக்கிறநாள். இன்று பஸ்ஸில் பிரயாணம் செய்வது நரக வேதனை.
சீதா தன் வயிற்றுப் பிழைப்புக்காக தினசரி பெரியநாய்க்கன் பாளையம் வரை சென்று பேக்டரி ஒன்றில் வேலை பார்த்து மாலையில் திரும்புகிறவள்
சாயிபாபா கோவிலருகே பஸ் நின்றபோது சீதாஏறிக் கொண்டாள்கூட்டத்தில் நீந்தி நெரிசலில் சிக்கி நுழைத்துக் கொண் டாள். பெரிய கில்லாடியான பெண் அவள்!
தெரிந்தமுகம்ஏதாவதுஇருக்கிறதா என்றுநோட்டம் விட்டாள். அப்போதுதான் அது நடந்தது. ஒருவயதானவர்.கட்டுகுடுமி. தொள தொள சட்டை முழங்கால் வரை தொங்கியது. முகம் முழுக்க பயம் பதுங்கியிருந்தது. அடிக்கடி அடிமடியைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.பெரியவர் மாடுவாங்க வந்திருக்கவேண்டும். குறைந்தது ஐந்தாயிரம் அல்லதுபத்தாயிரம் ரூபாயாவது மடியில் கனக்கிறது என்று புரிந்துகொண்டாள் சீதா. சுற்றும்முற்றும் பார் வையை ஓட்டினாள். மறுகணம் ஒருதிட்டம் உருவானது.
“அடடே மாமா.என்ன இப்படி? அதிசயமா இருக்கே! இப்படி வாங்க என்று பெரியவரின் கையைப் பிடித்து பெண்கள் நின்றிருந்தபக்கமாய் இழுத்தாள். பெரியவர் சுத்தமாய் பயந்து விட்டார்.
“யாருடி மாமா? வுட்றீ என்னை!”
பெரியவர் திமிறினார் சீதாவோ விடவில்லை.
“என்னதான் உங்க மகன் உங்களை திட்டினாலும் இப்படியா கோவிச்சுகிட்டு போவாங்க? அதுக்காக மருமகங்கறதை ஏன் மறைக்கணும்? நான் உங்களை ஒண்ணும் சொல்லையே”.
39

பஸ் கவுண்டம்பாறையத்தில் நிற்கவும் இரண்டு சீட்கள் காலியானது பெரியவரை உள்ளே தள்ளி,
“ நீங்க உக்காருங்க அப்புறம் பேசலாம்.எதுக்காக இந்தவயசான காலத்தில சந்தைசந்தையா அலைஞ்சு மாடுவாங்கி பண்ணயம் பாக்கறீங்க.! மகன் இன்ஸ்பெக்டர்! கை நிறைய சம்பாத்தியம் அக்கடான்னு உக்காந்து சாப்பிடவேண்டியதுதானே?”
சீதா சத்தம் போட்டுசொன்னாள்இநத வார்த்தையை சிந்தியமறுவி னாடி பெரியவரைச்சுற்றி நின்ற நாலுபேர்புறப் படஇருந்த பஸ்ஸைவிட்டுமளமளவென்று இறங்கினர்.பெரியவர் ஒன்றும் புரியாமல் திருதிருவென்று விழித்தார்.
“நீ என்னம்மா சொல்றே? எனக்கு பையனே கிடையாதே”.
என்றார் பயத்தில்.
“இல்லாட்டி பரவாயில்லை.உங்க பணம் பத்திரமாயிருக்கா பாருங்க?”
பெரியவருக்கு பக்கென்று நினைவு வந்தவராய் மடியைத் தொட்டுப் பார்த்தார்.
மடியிலிருந்த பணமூட்டை கீழேபாதி கிழிக்கப்பட்டு பிதுங்கப் பார்த்தது. இன்னும் கொஞசம் கிழிந்திருந்தாலும் பையிலிருந்த பணம் எட்டாயிரமும் கை மாறியிருக்கும்
என்பதை சட்டென்று உணர்ந்தார்.
“பெரியவரே நான் பஸ்சுலே ஏறினப்போ உங்க நிலைமை என் கண்ணில பட்டுச்சு உங்க மடியிலுஇருக்கிற பணத்தை அடிச்சுட்டுப்போறதுக்கு நாலுதிருட்டுபசங்க உங்கள நெருக்கறத பாத்தேன் அவுங்க கிட்டயிருந்து காப்பாத்ததான் மாமான்னும் இன்ஸ்பெக்டர்ன்னும் கதை வுட்டேன் அவுங்க பயந்து இறங்கி போயிட்டாங்க.” -என்றாள் சீதா.பெரியவர் கண்ணில் நீர்வடிய
“நீஎன் மருமக இல்லாட்டாலும் மக மாதிரி என்னை காப்பாத் தினியே நீ நல்லாயிரும்மா”.

-00000-